News February 8, 2025
3.99 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்

பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் தோகன் சாகு பதிலளித்துள்ளார். ஜன.30 வரை நாடு முழுவதும் 68 லட்சத்து 2 ஆயிரம் பேர் வியாபாரிகளுக்கான கடன் பெற்றுள்ளனர். பிரதமர் சுவநிதி திட்டம் மூலம் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
BREAKING: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் நாளை(செப்.9) காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. CM ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 8, 2025
24K, 22K, 18K தங்கம்.. என்ன வித்தியாசம் தெரியுமா?

தினசரி நாம் கேள்விப்படும் தங்க நகைகளில் 24K-வில் தொடங்கி, 22K, 18K, 14K, 10K என்ற வெரைட்டிகள் உள்ளன. இவை தங்கத்தின் தூய்மையை குறிக்கிறது. 24K என்பது 99.9% தூய்மையானது, அதே போல 22K என்பது 91.3% தூய்மையானதாகவும் 8.7% செம்பு, வெள்ளி போன்றவை கலக்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன்பாடும் உள்ளது. அவற்றை பற்றி அறிய, மேலே உள்ள படங்களை Swipe செய்து பார்க்கவும். Share it to friends.
News September 8, 2025
ரொம்ப விரக்தியை ஏற்படுத்தும்: ஷ்ரேயஸ்!

IPL தொடரில் 604 ரன்களை குவித்த போதும், Asia Cup தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் கூட இடம் கிடைக்காதது குறித்து, முதல் முறையாக ஷ்ரேயஸ் பேசியுள்ளார். Podcast ஒன்றில் பேசும் போது, பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போவது விரக்தியை மட்டுமே ஏற்படுத்தும் என ஷ்ரேயஸ் கூறியுள்ளார்.