News September 3, 2025

அரசின் அக்கறையின்மையால் பறிபோன உயிர்: EPS சாடல்

image

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததற்கு அரசின் அக்கறையின்மை தான் காரணம் என EPS சாடியுள்ளார். இப்படி பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன் என கேட்ட அவர், தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்று நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளோடு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 6, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் 15 காசுகள் குறைந்து ₹88.27 ஆனது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதால் கடந்த சில தினங்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏற்கெனவே USA-வின் புதிய வரியால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்கள் உள்பட பலருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News September 6, 2025

பாசம் மட்டுமே பாட்டிக்கு உரிமை கொடுத்துவிடாது: HC

image

பாட்டி, பேரன் இடையேயான பாசம் மட்டுமே குழந்தையை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது என மும்பை HC கூறியுள்ளது. பிறந்ததுமுதலே வளர்த்து வந்த தன் பேரனை பிரிய மனமின்றி கோர்ட் வரை சென்றிருக்கிறார் பாட்டி. சொத்து தகராறில், மகனை தன்னிடம் கொடுக்குமாறு தந்தை கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் (பாட்டி) மறுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், 2 வாரத்திற்குள் சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க HC உத்தரவிட்டுள்ளது.

News September 6, 2025

நேற்று செங்கோட்டையன்; இன்று அடுத்த தலைவர்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என EPS-க்கு, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இந்நிலையில், காலை 10.30 மணிக்கு, டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார். மதுரையில் மூக்கையா தேவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது. NDA கூட்டணியிலிருந்து விலகியது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளார்.

error: Content is protected !!