News March 6, 2025
லிவ் இன் உறவு… பாலியல் புகார் கூற முடியாது: சுப்ரீம் கோர்ட்

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் வாழும் ஜோடிகளுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நீண்ட காலம் லிவ் இன் உறவில் இருந்த பெண், தனது இணையர் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் இருந்து பிரிந்த கல்லூரி பேராசிரியர் தொடர்ந்த பாலியல் வழக்கில், இதனை கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News March 6, 2025
ஆர்எஸ்எஸ் VS பாஜக மோதல்: தாய்மொழி கருத்தால் சர்ச்சை

பங்காளிகளாக இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவிற்குள் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் வசிப்பதற்கு மராத்தி மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறி இருந்தார். அவரது கருத்து மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் ஃபட்னாவிஸ் (பாஜக), மகாராஷ்டிரா, மும்பையின் மொழி மராத்தி தான் எனக் கூறியுள்ளார்.
News March 6, 2025
ஷேக் ஹசீனா விவகாரத்தில் INDIA மௌனம்: முகமது யூனுஸ்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்றும், இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆக.5ஆம் தேதி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
News March 6, 2025
தமிழ்நாட்டில் வெப்பநிலை உயரும்: IMD எச்சரிக்கை

‘என்னா வெயிலு’-ன்னு மக்கள் இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாட்டின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது தான் அதற்கு காரணம். மேலும், சூடேற்றும் செய்தியை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 10ம் தேதி வரை இயல்பைவிட 2- 3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பவே இப்படின்னா, கோடைக்காலம் ஆரம்பிச்சா எப்படி இருக்குமோ?…