News April 8, 2025

முதலீட்டாளர்களுக்கு சின்ன நம்பிக்கை

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று 3.8% சரிந்ததால், முதலீட்டாளர்கள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், சந்தையின் போக்கை முன்கூட்டியே சுட்டிக் காட்டும் கிஃப்ட் நிஃப்டி, தற்போது 30 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. இது பெரிய நம்பிக்கையை அளிக்காவிட்டாலும், இறங்காமல் இருக்கிறதே என்று முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்

Similar News

News April 8, 2025

குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாமே…

image

இந்த அவசர உலகில் சுற்றுலா செல்ல யாருக்குத்தான் பிடிக்காது. ஒரு நாள், 2 நாள் விடுப்பு கிடைத்தால்கூட குறைந்த பட்ஜெட்டில் எளிதாக சென்றுவரக்கூடிய பல சுற்றுலா தலங்கள் நம் தமிழ்நாட்டிலேயே உள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் உள்ள குருசடை தீவு, சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு ஏரி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குண்டாறு அணைக்கட்டு உள்ளிட்ட மனதிற்கு இதமளிக்கும் பல இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

News April 8, 2025

பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

image

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கின்றேன். *ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. *என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை.

News April 8, 2025

10 ஆண்டுக்கு பின் மும்பையை சாய்த்த RCB

image

நேற்றைய ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை பெங்களூரு அணி வீழ்த்தியது. பத்தாண்டுகளுக்கு பின் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை RCB வீழ்த்தியுள்ளது. மும்பையின் கோட்டையில் வைத்தே அந்த அணிக்கு RCB அதிர்ச்சி கொடுத்துள்ளது. 5 போட்டிகளில் விளையாடிய மும்பை அணிக்கு இது 4வது தோல்வி. வெற்றிக்காக கடைசிவரை போராடிய மும்பை அணி இறுதியில் இலக்கை எட்ட முடியவில்லை. அப்போ ஈசாலா கப் நமதே வா?

error: Content is protected !!