News September 20, 2025

பழவேற்காடு சரணாலயத்தில் மதுக்கடை: அன்புமணி சாடல்

image

மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடை நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழலை அழிக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பறவைகள் சரணாலயத்தில், மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் எனவும் அன்புமணி சாடியுள்ளார்.

Similar News

News September 20, 2025

இந்த தண்ணீரை யூஸ் பண்ணா முடி அடர்த்தியா வளரும்

image

தேநீர் தூள் கொதிக்க வைத்த தண்ணீரை தலைக்கு தேய்ப்பதால் முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரும் என கூறப்படுகிறது. இதில் உள்ள கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் முடி உடைவதை தடுக்கிறதாம். அதோடு அதில் உள்ள காஃபின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி அடர்த்தியாக வளர உதவுவதாக கூறப்படுகிறது. இத நீங்க ட்ரை பண்ணியிருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 20, 2025

வீட்டு கடன் EMI குறைகிறது

image

வீட்டு கடனுக்கான MCLR (Marginal Cost of Funds based Lending Rate) விகிதத்தை வங்கிகள் குறைத்துள்ளன. இதனால் EMI தொகையில் கணிசமான தொகை சேமிப்பாகும். 6 மாத காலத்திற்கான MCLR-ஐ 8.65% ஆக HDFC குறைத்துள்ளது. BOB வங்கி: 10-15 அடிப்படை புள்ளிகள், IOB, IDBI, PNB, BOI ஆகிய வங்கிகளும் 5-15 அடிப்படை புள்ளிகள் வரை தங்களது MCLR-ஐ குறைத்துள்ளன. இது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியை கொடுக்கும். SHARE IT.

News September 20, 2025

AI மூலம் UPSC தேர்வர்களின் அடையாளம் சரிபார்ப்பு

image

UPSC தேர்வுகளின் போது தேர்வர்களின் முக அடையாளங்களை உறுதிப்படுத்த AI மூலம் சோதனை செய்யும் நடைமுறை அறிமுகமாகியுள்ளது. சமீபத்தில் குருகிராமில் நடந்த தேர்வில் இம்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்வர்களின் அடையாளங்களில் கூடுதல் பாதுகாப்பை அளிப்பதாகவும், தேர்வர்களின் சரிபார்ப்பு நேரத்தை 8-10 விநாடிகள் அளவு குறைப்பதாகவும் UPSC தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த தேர்வுகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

error: Content is protected !!