News June 28, 2024
ஆட்சியாளர்கள் உதவியுடன் சாராயம் விற்பனை: பிரேமலதா

தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடு கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் ரவி தங்களிடம் வேதனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
Similar News
News December 2, 2025
தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டது: பிரேமலதா

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டதாகவும், இனி பிரகாசம்தான் எனவும் கூறியுள்ளார். எங்களது தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது தனது ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 2, 2025
நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்திடுங்க மக்களே. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?
News December 2, 2025
கன்ட்ரோல் ரூமில் ஷூட்டிங் நடத்தும் CM: EPS

டிட்வா புயலால் ராமேஸ்வரமே மூழ்கியபோது, இலங்கைக்கு வேண்டிய உதவிகளை செய்வேன் என CM ஸ்டாலின் வாய்ச் சவடால் அடிப்பதாக EPS விமர்சித்துள்ளார். மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து CM ஷூட்டிங் நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரால் சேதமடைந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.


