News June 28, 2024
ஆட்சியாளர்கள் உதவியுடன் சாராயம் விற்பனை: பிரேமலதா

தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடு கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் ரவி தங்களிடம் வேதனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
Similar News
News December 3, 2025
வணிகர்கள் 4 மாதங்கள் ₹500 கட்டணமின்றி பதிவு செய்யலாம்

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்த உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 மார்ச் 31-ம் தேதி வரை, நிரந்தர உறுப்பினராவதற்கு ₹500 கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. GST சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாமல், வருடத்திற்கு ₹40 லட்சம் வரை விற்றுமுதல் அளவு (Turn Over) வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
News December 3, 2025
மொபைல் APP சர்ச்சை.. திரும்ப பெற்ற மத்திய அரசு

மொபைல் நிறுவனங்கள் ‘Sanchar Saathi’ செயலியை கட்டாயமாக Preload செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாடு முழுவதும் இந்த செயலியை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, <<18447303>>‘Sanchar Saathi’<<>> செயலி மூலம் மக்களை மத்திய அரசு வேவு பார்க்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.
News December 3, 2025
PM மோடி டீ விற்கும் AI வீடியோ.. சர்ச்சையில் காங்கிரஸ்

காங்., நிர்வாகி ராகினி நாயக் பகிர்ந்த AI வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு கம்பளத்தில் நடந்தவாறு PM மோடி டீ விற்பது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதை கடுமையாக கண்டித்துள்ள பாஜக, உயர் வர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு OBC பிரிவில் இருந்து கடுமையாக உழைத்து முன்னேறிய தலைவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், பிரதமரின் பின்னனி குறித்து இதுவரை 150 முறை அவமதித்துள்ளதாகவும் சாடியுள்ளது.


