News September 15, 2024
நர்மதா நதியோர நகரங்களில் மதுவுக்கு தடை

நர்மதா நதிக்கரையோரம் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதையொட்டிய இடங்களில் மது, இறைச்சி தடை செய்யப்படுவதாக ம.பி., மாநில CM தெரிவித்துள்ளார். நர்மதா நதி செயல்திட்டம் குறித்து CM மோகன் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், நதிக்கரையோர குடியிருப்பில் இருப்பவர்கள் நதியில் கழிவுநீரை விடக்கூடாது, இறைச்சி, மது சாப்பிடக்கூடாது என்றும், ட்ரோன் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 20, 2025
மோடியின் தீபாவளி கிளிக்ஸ்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS விக்ராந்த் போர்க்கப்பலில், PM மோடி தீபாவளியை கொண்டாடினார். கப்பற்படை வீரர்களுக்கு மத்தியில் பேசிய அவர், நக்சல் பயங்கரவாதத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்றார். நக்சல் பயங்கரவாதத்தை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வரும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், போர் வீரர்களுடன் PM மோடி கொண்டாடிய தீபாவளி போட்டோஸை swipe செய்து பாருங்கள்.
News October 20, 2025
இதுதான் சூர்யாவின் பயங்கர மாஸ்: RJ பாலாஜி!

‘சூரரை போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற தரமான படங்களை கொடுத்தாலும், மாஸ் ஆக்ஷன் ரசிகர்களுக்கு நீண்ட நாள்களாகவே சூர்யா தீனி போடவில்லை. அந்த குறையை ‘கருப்பு’ படம் தீர்த்து வைக்கும் போலும். ‘சிங்கம் 2’ படத்துக்கு பின், ‘கருப்பு’ படத்தில்தான் பயங்கர மாஸாக சூர்யா நடித்திருப்பதாக கூறிய அவர், படத்தின் விஷுவலும் சூர்யாவின் நடிப்பும் மிகவும் தன்னை ஈர்த்ததாகவும் RJ பாலாஜி தெரிவித்துள்ளார். கருப்பு நெருப்பாகுமா?
News October 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

உங்களது மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நிராகரிப்புக்கான காரணம் குறித்து போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அந்த காரணம் ஏற்புடையதல்ல என நீங்கள் எண்ணினால், மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் இணைந்து கொள்ளலாம். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.