News September 15, 2024
நர்மதா நதியோர நகரங்களில் மதுவுக்கு தடை

நர்மதா நதிக்கரையோரம் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதையொட்டிய இடங்களில் மது, இறைச்சி தடை செய்யப்படுவதாக ம.பி., மாநில CM தெரிவித்துள்ளார். நர்மதா நதி செயல்திட்டம் குறித்து CM மோகன் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், நதிக்கரையோர குடியிருப்பில் இருப்பவர்கள் நதியில் கழிவுநீரை விடக்கூடாது, இறைச்சி, மது சாப்பிடக்கூடாது என்றும், ட்ரோன் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 534 ▶குறள்: அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. ▶பொருள்: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.
News November 29, 2025
அப்போ ட்ரோல், இப்போ பாராட்டு: லிங்குசாமி

சூர்யாவின் ‘அஞ்சான்’ நேற்று ரீரிலீஸானது. இந்நிலையில், இப்படம் முதலில் ரிலீஸானபோது பலரும் ட்ரோல் செய்ததாக அதன் இயக்குநர் லிங்குசாமி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், இந்த படத்தையா ட்ரோல் செய்தார்கள் என தற்போது பலர் தன்னிடம் கூறியதாக நெகிழ்ந்துள்ளார். மேலும், தான் இயக்கிய மேலும் சில படங்களை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் எந்த படத்தை ரீரிலீஸ் செய்யலாம்?
News November 29, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


