News September 15, 2024
நர்மதா நதியோர நகரங்களில் மதுவுக்கு தடை

நர்மதா நதிக்கரையோரம் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதையொட்டிய இடங்களில் மது, இறைச்சி தடை செய்யப்படுவதாக ம.பி., மாநில CM தெரிவித்துள்ளார். நர்மதா நதி செயல்திட்டம் குறித்து CM மோகன் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், நதிக்கரையோர குடியிருப்பில் இருப்பவர்கள் நதியில் கழிவுநீரை விடக்கூடாது, இறைச்சி, மது சாப்பிடக்கூடாது என்றும், ட்ரோன் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING: புதிய கட்சி.. OPS அறிவித்தார்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக OPS அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
சென்னையில் எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?

உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அதன்படி, 2024-2025-ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
டிச.1-ல் குரூப்-1 முதன்மை தேர்வு தொடக்கம்

குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. Prelims-ல் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது.


