News April 15, 2024

₹10 ஆயிரத்தை ₹34,700 கோடியாக்கிய சிங்கப் பெண்

image

இந்தியாவின் முன்னணி உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பயோகானை நிறுவிய கிரண் மஸூம்தார் ஷா, கர்நாடகாவில் கடந்த 1953இல் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1978இல் ₹10,000இல் பயோகான் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹34,700 கோடியாக உயர்ந்துள்ளது. கிரண் மஸூம்தாரின் சொத்து மதிப்பு மட்டும் ₹23,247 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

கூடங்குளம் அணுமின் நிலையம்: புடின் நம்பிக்கை

image

கூடங்குளத்தில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்து வருவதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அங்குள்ள 6 அணு உலைகளில் 3 உலைகள் இந்தியாவின் எரிசக்தி வலையமைப்புடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறினார்.

News December 5, 2025

சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக: அண்ணாமலை

image

திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் 161 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

News December 5, 2025

சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

image

பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தவெக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, தவெகவின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிச.6, 7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பூத் என்றால் என்ன?, SIR என்றால் என்ன? என்பது பற்றியும், உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

error: Content is protected !!