News April 15, 2024
₹10 ஆயிரத்தை ₹34,700 கோடியாக்கிய சிங்கப் பெண்

இந்தியாவின் முன்னணி உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பயோகானை நிறுவிய கிரண் மஸூம்தார் ஷா, கர்நாடகாவில் கடந்த 1953இல் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1978இல் ₹10,000இல் பயோகான் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹34,700 கோடியாக உயர்ந்துள்ளது. கிரண் மஸூம்தாரின் சொத்து மதிப்பு மட்டும் ₹23,247 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
இந்தியா-ரஷ்யா உறவு.. புடின் திட்டவட்டம்

இந்தியா, ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பானது அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டையும் இலக்காக கொண்டதல்ல என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை IND வாங்குவது போருக்கு நிதி அளிக்கும் செயல் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், US தங்களிடம் தான் அணுசக்தி எரிபொருள் வாங்குவதாக புடின் குறிப்பிட்டார். தானும் PM மோடியும் ரஷ்யா, இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
News December 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 540
▶குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
▶பொருள்: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
News December 5, 2025
பகவத் கீதையை புடினுக்கு பரிசளித்த PM மோடி

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு PM மோடி பகவத் கீதையை பரிசளித்துள்ளார். இதுபற்றி X-ல் PM மோடி, பகவத் கீதையின் போதனைகள் உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிபர் புடினுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.


