News March 1, 2025
அழிவின் விளிம்பில் இருந்து 64% வளர்ச்சி அடைந்த சிங்கம்!

அழிவின் விளிம்பில் இருந்த ஆசிய சிங்கங்களை காப்பாற்ற 1973ல் கிர் லயன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 2010ல் 411 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ல் 674ஐ எட்டியது. அதாவது, 64% எண்ணிக்கை உயர்வு. இத்திட்டம், குஜராத்தின் சாசன் கிர் புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2023- 2024 நிதியாண்டில் மட்டும் இந்திய அரசாங்கம் ₹155.5 கோடியை ஒதுக்கியது.
Similar News
News March 1, 2025
கூட்டு சேர்ந்த அமெரிக்கா – ரஷ்யா

உலக அரங்கில் பரம எதிரிகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் நிற்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்த வரை, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பொருளுதவி செய்து வந்தார். தற்போது, பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், இனி பொருளுதவி செய்ய முடியாது என்று சொல்லி போரை நிறுத்த சொல்கிறார். இதன்மூலம், அமெரிக்கா மறைமுகமாக ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது.
News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.
News March 1, 2025
கூலிக்கு பிறகு தெலுங்கு ஹீரோவை இயக்கும் லோகேஷ்

லியோ படத்திற்கு பிறகு, லோகேஷ் ரஜினியின் ‘கூலி’ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை முடித்து அவர், ‘கைதி 2’ தான் இயக்குவார் எனப்படுகிறது. ஆனால், இதனிடையே அவருக்கு பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பட வாய்ப்பை லோகேஷ் ஏற்பார் எனப்படுகிறது. இத்தகவல் வெளியாகவே ரசிகர்கள் மீண்டும் கைதி தள்ளிப்போகுமா என வருத்தத்தில் இருக்கிறார்கள்.