News March 5, 2025

EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்

image

TNல் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெற நுகர்வோர் தங்கள் ஆதாரை, EB எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டுமென TN அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ள இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயமாகும்.

Similar News

News November 2, 2025

SIR-ஐ கடுமையாக எதிர்க்க வேண்டும்: திருமா

image

வாக்களர் பட்டியலைச் சீர்செய்வது என்பதைவிட, குடியுரிமையைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதவேண்டி உள்ளதாக SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் திருமா தெரிவித்துள்ளார். அதாவது, CAA, NRC ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தான் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது. எனவே, SIR நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டுமென அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தினார்.

News November 2, 2025

இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

image

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?

News November 2, 2025

கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

error: Content is protected !!