News March 5, 2025
EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்

TNல் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெற நுகர்வோர் தங்கள் ஆதாரை, EB எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டுமென TN அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ள இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயமாகும்.
Similar News
News December 6, 2025
‘ஹாப்பி ராஜ்’ ஆக மாறிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹாப்பி ராஜ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் நிலையில், படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு, படத்தின் பெயரை அறிவித்துள்ளது.
News December 6, 2025
தி.குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை: BJP

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் மதக் கலவரம் ஏற்படவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை என்ற அவர், இந்தியாவில் தானே அயோத்தி உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். NDA கூட்டணியின் ஆட்சி ராமரின் ஆட்சியாகவே இருக்கும் என தெரிவித்த நயினார், சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுகிறீர்களா என திமுகவை சாடியுள்ளார்.
News December 6, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

தற்போது 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவுள்ளது. இந்நிலையில், டிச.12-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால், உடனே கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


