News September 7, 2025

Gpay, Phonepe-ல் வரம்பு ₹10 லட்சமாக அதிகரிப்பு

image

வரும் செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) தினசரி வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை தான் அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.

Similar News

News September 8, 2025

செங்கோட்டையனுக்கு ByeBye… அந்தர் பல்டி அடித்த MLA

image

கடந்த ஒருவாரமாக செங்கோட்டையனுடன் கூடவே இருந்த பவானி MLA பண்ணாரி, திடீர் திருப்பமாக EPS-க்கு ஆதரவு அளித்துள்ளார். செங்கோட்டையன், உள்ளிட்ட 9 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜை பண்ணாரி சற்றுமுன் சந்தித்தார். அதன்பின் அவர் பேசுகையில், இயக்கம் தான் பெரியது, தனிநபர் அல்ல; EPS-க்கு துணை நிற்போம் என அந்தர்பல்டி அடித்துள்ளார்.

News September 8, 2025

நாஞ்சில் விஜயன் மீது PHOTO ஆதாரத்துடன் திருநங்கை புகார்

image

விஜய் டிவி-யின் ‘கலக்கப்போவது யார்’ ஷோ மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகைப்பட ஆதாரங்களுடன் திருநங்கை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் யார் என்றே தெரியாது என நாஞ்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

ஆதாரை 12வது ஆவணமாக ஏற்க வேண்டும்: SC

image

வாக்காளர் பட்டியலில் ரேஷன் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-வது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என SC உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதாரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

error: Content is protected !!