News April 24, 2024
2019ஐ போல் 2024இல் மெஜாரிட்டி வேண்டும்

மக்கள் நிலையான அரசைக் கொடுத்ததால் தான் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 2019இல் மக்கள் பாஜகவுக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். அதன்மூலம் ராமா் கோவில், முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகிவற்றை எதிர்ப்பின்றிக் கொண்டு வர முடிந்தது என்ற அவர், தனிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசே நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவை என்றும் கூறினார்.
Similar News
News January 8, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், ₹6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிலுவை விவரங்களை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
News January 8, 2026
ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்ட நடிகை

நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையை பார்த்து அறியமுடியாது என தெருநாய்கள் தொடர்பான வழக்கில் <<18789195>>SC<<>> நேற்று கருத்து தெரிவித்திருந்தது. இதை மேற்கோள் காட்டி, ஒரு ஆணின் மனநிலையையும் நம்மால் அறியமுடியாது என நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். ஒரு ஆண் எப்போது ரேப் செய்வான், எப்போது கொலை செய்வான் என்பது தெரியாததால், அனைத்து ஆண்களையும் சிறையில் தள்ளலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜன.5-ம் தேதி முதல் பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் இருப்பவர்களை தவிர மற்றவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


