News March 27, 2025
கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை!

தகாத உறவைக் கண்டித்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண் மற்றும் அவரது காதலனுக்கு ஓசூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி உன்னிசெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் கடந்த 2021இல் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், ஐயப்பனின் மனைவி ரூபா(27), அவரது காதலன் தங்கமணி(25) இருவரும் ஐயப்பனை கழுத்தை நெரித்து கொன்றதை கண்டுபிடித்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.
News November 18, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.
News November 18, 2025
PAK-ன் 255 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்கள், ஆயுதங்களை கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட, இப்படியொரு குற்றச்சாட்டில் விஷால் பச்சார் என்பவரை <<18300589>>NIA <<>>கைது செய்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும், பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக BSF தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மூடுபனி காலம் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.


