News April 6, 2025
பயிரை மேய்ந்த வேலிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.
Similar News
News November 29, 2025
மெஸ்ஸியின் இந்தியா டூர்: அட்டவணை வெளியானது

இந்திய கால்பந்து ரசிகர்களே, உங்கள் விருப்பமான மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணை வெளியாகிவிட்டது. இதன்படி, டிச.13 காலையில் கொல்கத்தா, அன்று மாலை ஹைதராபாத், டிச.14-ல் மும்பை, 15-ல் டெல்லியில் அவர் விளையாட்டு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, கொச்சி வருவதாக இருந்த மெஸ்ஸியின் பயணம் ரத்தானது. இப்பயணத்தையொட்டி, இந்திய மக்களின் அன்புக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 29, கார்த்திகை 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம் ▶சிறப்பு: சனி வழிபாட்டு நாள். ▶வழிபாடு: கோளறு பதிகம் பாடி நவகிரகத்தின் ஆசியை பெறுதல்.
News November 29, 2025
2 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

மணிக்கு 7 கிமீ., வேகத்தில் ‘டிட்வா’ புயல் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 370 கிமீ., தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 470 கிமீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.


