News April 6, 2025

பயிரை மேய்ந்த வேலிக்கு ஆயுள் தண்டனை

image

தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.

Similar News

News January 19, 2026

தீ பரவட்டும் என்றால் நடுங்குகின்றனர்: உதயநிதி

image

அண்ணா பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறதாக சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்று நிகழ்ச்சியில் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் ‘தீ பரவட்டும் என்று சொன்னால்’ இன்றைக்கும்கூட சிலர் பயந்து நடுங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்ற தீ பரவட்டும் என்ற வார்த்தையை தணிக்கை குழு நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 19, 2026

ஜன நாயகன் வழக்கு.. புதிய பரபரப்பு தகவல்

image

ஜன நாயகன் தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாளை சென்னை HC-ல் விசாரணைக்கு வருகிறது. காலை 11:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடக்கும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டால் ஜன நாயகன் விரைவில் ரிலீசாகும். சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டால் படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்.

News January 19, 2026

நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ₹9,000 கோடி கேட்கும் டிரம்ப்

image

காசாவின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (₹9,000 கோடி) செலுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியாவின் <<18893549>>PM மோடி <<>>உட்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பணம் செலுத்தவும், இந்த நிதி காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!