News April 6, 2025

பயிரை மேய்ந்த வேலிக்கு ஆயுள் தண்டனை

image

தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.

Similar News

News November 21, 2025

தேஜஸ் விபத்து சதியாக இருந்தால்… யாருக்கு லாபம்?

image

<<18350384>>தேஜஸ் விமான விபத்து<<>> சதியாக இருந்தால், அதற்கு இவை பின்னணி காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்: *சில நாடுகளின் போர் விமான பிசினஸ் பாதிக்கப்படும் *அவர்களுக்கு பிடிக்காத நாடுகள் தேஜஸை வாங்குவதை விரும்பவில்லை *இந்தியாவின் தன்னம்பிக்கையை உடைப்பது *உள்நாட்டில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி குழப்பம் விளைவிப்பது *இந்தியாவின் ஆயுதங்கள், பாதுகாப்புத் துறை மீதான நம்பிக்கையை உடைப்பது.

News November 21, 2025

அழுகிய மனைவி உடல்.. கொடூர கணவன் சிக்கினான்

image

குஜராத், பவ்நகரில் நடந்துள்ள கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான கம்பலா, சக பெண் அலுவலருடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவரது மனைவி, மகள்(13), மகன்(9) திடீரென காணாமல் போயுள்ளனர். போலீஸின் தீவிர விசாரணையில் கம்பலா வீட்டருகிலேயே 3 பேரின் அழுகிய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கொலை செய்ததாக கம்பலா கைது செய்யப்பட்டுள்ளார்.

News November 21, 2025

வங்கி கணக்கில் ₹2,000.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கியுள்ளன. தகுதியுள்ள மாணவர்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது சான்று நகல், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு 18 வயது வரை தமிழக அரசு மாதம் ₹2,000 வழங்க உள்ளது.

error: Content is protected !!