News October 2, 2025
சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி முர்முவுக்கு கடிதம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதற்கு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் எனக் கூறி, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜோத்பூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முர்மு தலையிட்டு, வாங்சுக்கை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று, அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ கடிதம் அனுப்பியுள்ளார்.
Similar News
News October 2, 2025
₹30,000 சம்பளம்: 610 பணியிடங்கள் அறிவிப்பு

பெங்களூரு BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள 610 பொறியியல் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc. வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம்: 3 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் ₹30,000 – ₹40,000. இதுதவிர ₹12,000 மருத்துவம் உள்பட இதர செலவுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.7. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News October 2, 2025
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க விவசாயிகள் பிரச்னை குறித்து பேசப்படும் எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை வாங்க, சீனா மறுப்பதால் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரி விதிப்பால் கிடைத்த பணத்தில் விவசாயிகளுக்கு உதவுவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News October 2, 2025
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

ஓபிஎஸ் அணியை சேர்ந்த புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதேபோல், OPS அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, மாவட்ட இணை செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும், திமுக, காங்., அமமுகவை சேர்ந்த பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.