News June 26, 2024
கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: ராகுல்

தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குரலும், நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
Similar News
News November 21, 2025
பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <
News November 21, 2025
50,000 சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

நல்லது, கெட்டது தெரியாத வயதில் குற்றம் செய்யும் சிறுவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கவே தனி சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கூர்நோக்கு நீதி வாரியங்களிலும் மெத்தனம் காட்டப்படுவதால், 50,000 சிறுவர்கள் நீதி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நாடு முழுவதும் 362 கூர்நோக்கு இல்லங்களில், 55% வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
News November 21, 2025
BREAKING: விஜய் உடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

TN-ல் கூட்டணி மாற்றம் வேண்டாம் என ராகுல் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கார்கே இதனை, தமிழக நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக <<18343041>>செல்வப்பெருந்தகை<<>> நேற்று கூறியிருந்தார். சில நாள்களாக பேசப்பட்டு வந்த காங்., – தவெக கூட்டணி விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


