News June 26, 2024
கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: ராகுல்

தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குரலும், நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
Similar News
News October 26, 2025
பள்ளிகளுக்கு இங்கெல்லாம் நாளை விடுமுறை அறிவிப்பு

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக்.27) விடுமுறையாகும். ஏற்கெனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27 அன்று உள்ளூர் விடுமுறை என்பதால் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.
News October 26, 2025
அட்ரா சக்க.. இதுதான் ஜெயிலர் 2 கதையா?

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் ஜெயிலர் 2-வின் கதை Synopsis ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வர்மனை கொன்ற பிறகு, மேலும் சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடி தேடி முத்துவேல் பாண்டியன் எப்படி வேட்டையாடுகிறார் என்பதே ஜெயிலர் 2 என்கின்றனர். முதல் பார்ட்டை விடவும் இதில் Violence அதிகமாக இருந்த போதிலும், ரஜினி ‘அதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம், படம் நல்லா வந்தா போதும்’ என கூறிவிட்டாராம்.
News October 26, 2025
DMK-ஐ எதிர்க்கும் கட்சிகளுக்கு G.K.வாசன் அழைப்பு

சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எனவே, தமாகாவினர் கண்ணும் கருத்துமாக தேர்தல் பணியை செய்து, தமாகாவுக்கு உரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.


