News January 1, 2025
பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்போம்: இபிஎஸ்

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறியுள்ளார். மேலும், பொற்கால ஆட்சியை மாநிலத்தில் மீண்டும் அமைப்போம் என இந்நாளில் சபதமேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வசதியாக, நாளை மற்றும் நாளை மறுநாள்ஆகிய 2 தினங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சேவை மையங்கள் செயல்படும். இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 21, 2025
கஸ்டமர்களை ஏமாற்றியதால் செக்!

ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது, முதலில் விலை குறைவாக இருக்கும். ஆனால், பில்லிங்கின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை பலரும் எதிர்கொண்டிருப்போம். இப்படி கஸ்டமர்களை ஏமாற்றுவதை ‘டார்க் பேட்டர்ன்’ மூலம் இ- காமர்ஸ் நிறுவனங்கள் செய்துவந்தன. இதற்கு மத்திய அரசு கடிவாளம் போட்ட நிலையில் Swiggy, Zomato உள்ளிட்ட 26 நிறுவனங்கள், டார்க் பேட்டர்ன்களை நீக்கியுள்ளன.
News November 21, 2025
2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.


