News August 4, 2024
புதிய நட்பை உருவாக்குவோம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உறவுகள் பலவற்றிலும் மாசில்லாதது, எதையும் எதிர்பார்க்காதது, அளவின்றி அன்பு செய்யக்கூடியது, நம்பிக்கை கொடுப்பது, இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது எது? அது தான் சாதி, மத, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான நட்பு எனும் உறவு. அந்த நட்பை கொண்டாடும் இந்த நாளில் நண்பர்களுடான நட்பை பலப்படுத்துவோம்.
Similar News
News December 28, 2025
கடவுளிடம் கோலிக்காக வரம் கேட்பேன்: நவ்ஜோத் சிங்

கடவுள் தனக்கு ஒரு வரம் கொடுத்தால், கோலி டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதை மீட்டு மீண்டும் விளையாட வைப்பேன் என முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். நாட்டின் 150 கோடி மக்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது எனவும், கோலி தனது ஃபிட்னஸ் அடிப்படையில் இன்னும் 20 வயதிலேயே நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் 24 காரட் தங்கம் என்றும் புகழ்ந்துள்ளார்.
News December 28, 2025
இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வகை உணவுகளால் இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில் சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடு முன் யோசிக்கவும்.
News December 28, 2025
தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞர்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில், தாயாருடன் வசித்து வந்தவர் பிரவீன் கால்கோ. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாய்க்கு, வீட்டிலேயே சிகிச்சை பார்த்து வர, திடீரென உயிரிழந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல், அதிர்ச்சியில் கடும் மன அழுத்தத்திற்கு சென்ற அவர், 20 நாள்களாக தாயின் சடலத்துடன் ஒரே அறையில் வசித்துள்ளார். உடல் அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகே இந்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


