News May 7, 2024

இந்தியாவை சூப்பர் பவர் கொண்ட நாடாக மாற்றுவோம்

image

2027க்குள் இந்திய உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என உலகளாவிய நிறுவனங்கள் பேசிவருவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2014 வரை காங்., ஆட்சி செய்தபோது பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் இருப்பதாகக் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்தியாவை சூப்பர் பவர் கொண்ட நாடாக மாற்ற விரும்புவதாகக் கூறினார்.

Similar News

News August 21, 2025

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இபிஎஸ் விளக்கம்

image

அதிமுகவை பொறுத்தவரை கொள்கை நிலையானது என்றும், ஆனால் கூட்டணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலுக்காக அமைக்கப்படுவது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு, அதே சமயம் ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு என்று கூறினார். இருவருக்கும் ஒத்த கருத்து திமுகவை அகற்றுவது அதனால்தான் கூட்டணி சேர்ந்திருப்பதாக கூறினார்.

News August 21, 2025

ஆகஸ்ட் 21: வரலாற்றில் இன்று

image

*1986 – பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் பிறந்ததினம்.
*1778 – அமெரிக்கப் புரட்சிப் போரின் போது, பிரிட்டிஷ் படைகள் பிரெஞ்சு குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டன.
*1907 – தோழர் ப.ஜீவானந்தம் பிறந்ததினம்.
*1963 – திரைப்பட நடிகை ராதிகா பிறந்ததினம்.
* 1988 – நேபாள-இந்திய எல்லைப்பகுதியில் 6.9 அளவில் நிலநடுக்கம். இதில் 1,450 பேர் உயிரிழந்தனர்.

News August 21, 2025

டெல்லி விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

image

கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். வரும் ஆக.23-ம் தேதி வரை அவர் அங்கிருக்க உள்ளார். ஆளுநரின் பயணம் திட்டமிட்டது என்றும், டெல்லியில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கவர்னர் அடுத்தடுத்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!