News March 17, 2024
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் தொடங்கிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில் , ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் மக்களவைத் தேர்தலில் பங்கேற்க உள்ளது. மக்களுக்கு பணியாற்றவும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக வலுப்படுத்தக் கிடைத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.
Similar News
News January 26, 2026
ஆசிட் வீச்சு முதல் பத்மஸ்ரீ விருது வரை!

ம.பி.,யை சேர்ந்த மங்களா கபூர், 12 வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுகிறார். அவருக்கு தொடர்ச்சியாக 37 அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்குள் இருந்த தன்னம்பிக்கை கொஞ்சமும் துவண்டு போகவில்லை. இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், குவாலியர் கரானா பாரம்பரிய இசையில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மத்திய அரசால் தற்போது ‘பத்ம ஸ்ரீ’ விருதை பெற்றுள்ளவர், அனைவருக்கும் ஒரு முன்மாதிரியே!
News January 26, 2026
புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் 28-ம் தேதி(புதன்கிழமை) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News January 26, 2026
ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்ற விஜய்: KN நேரு

எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் எனக் கூறிய விஜய்யை அமைச்சர் நேரு மறைமுகமாக விமர்சித்துள்ளார். பட ரீலிசிற்காக Ex CM ஜெயலலிதாவிடம் விஜய்யும், அவரது தந்தையும் கைகட்டி நின்றதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று நேரு சாடியுள்ளார். மேலும், உங்களுக்கு நான் என்றைக்குமே எதிரியல்ல என ஜெயலலிதாவிடம் கூறி அழுத்தத்திற்கு பயந்த விஜய், தற்போது வீரவசனம் பேசுவதாகவும் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.


