News September 5, 2025
சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.
Similar News
News September 5, 2025
ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

₹60 கோடி மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்தராவிற்கு எதிராக மும்பை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தன்னிடம் இருந்து வாங்கிய ₹60 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தீபக் கோதாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தம்பதி அடிக்கடி வெளிநாடு செல்வதால், வழக்கு விசாரணை சுமூகமாக நடப்பதற்கு ஏதுவாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
இந்தியர்களை வம்பிழுத்த USA நிர்வாகி.. இந்தியா சாடல்

மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெயால் பிராமணர்களே பலனடைவதாக டிரம்பின் பொருளாதார ஆலோசகர் நவரோ தெரிவித்த கருத்தை, இந்தியா நிராகரித்துள்ளது. இது பொய்யான தகவல் எனவும், மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சாடியுள்ளது. மேலும், USA உடனான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, நவரோவின் கருத்துக்கு பாஜகவும், காங்கிரசும் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தன.
News September 5, 2025
BREAKING: பூவை செங்குட்டுவன் காலமானார்

ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்(90) காலமானார். வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஏராளமான ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை. RIP