News December 5, 2024
மோதுவோம் வா.. திருச்சி SPக்கு சீமான் அழைப்பு

திருச்சி SP வருண்குமார், நாதகவை பிரிவினைவாத இயக்கம் என அண்மையில் பேசியிருந்தார். ஏற்கெனவே சீமானுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி பிறகு தணிந்திருந்தது. இந்த நிலையில், இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், வருண்குமாருடன் தாம் மோத தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், நேருக்கு நேர் மோதுவோம் வா என்றும் வருண்குமாருக்கு சீமான் அழைப்பு விடுத்தார்.
Similar News
News November 24, 2025
விழுப்புரம்:குறைகேட்பு கூட்டத்தில் குவிந்த 443 மனுக்கள்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுப்பது வழக்கம் அந்த வகையில் இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் மனுகொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். குறைகேட்பு கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகள் 443 மனுக்கள் குவிந்தது. ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
News November 24, 2025
மகளிர் கபடி அணிக்கு PM மோடி வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பை கபடியில் சாம்பியன் பட்டம் வென்ற <<18376835>>இந்திய அணியை<<>> PM மோடி வாழ்த்தியுள்ளார். இந்த வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மகளிர் அணியின் வெற்றியானது, எண்ணற்ற இளைஞர்களை கபடியில் ஈடுபடவும், பெரிய அளவில் கனவு காண்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் PM மோடி கூறியுள்ளார். தொடர் முழுக்க இந்திய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
பவாரியா கொள்ளையர்கள் வழக்கு கடந்து வந்த பாதை (1/2)

கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனத்தின் வீட்டில் 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் புகுந்த பவாரியா கும்பல், அவரை கொலை செய்துவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து இந்த கும்பலைச் சுட்டுப்பிடிக்க அப்போதைய CM ஜெயலலிதா ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்தார். அவர்கள் ஹரியானாவை சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.


