News April 16, 2024

மாநிலங்களவை சீட் கேட்போம்

image

இந்த முறை தேமுதிகவுக்கு உறுதியாக ஒரு மாநிலங்களவை சீட் கேட்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சீட் கேட்பது எங்களது உரிமை. அதைத் தர வேண்டியது கூட்டணிக் கட்சியின் தர்மம் எனப் பேசிய அவர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அங்கு வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்த முறை அவருக்கே வாய்ப்பு தருவோம் என மக்கள் உறுதியாக கூறியுள்ளதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.

Similar News

News November 10, 2025

உங்களுக்கும் இப்படி போன் வருதா.. உஷாரா இருங்க!

image

செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், மொபைல் எண் பிளாக் செய்யப்படும் என மிரட்டி, சைபர் குற்றவாளிகள் போன் செய்து, பணத்தை சுருட்டி வருகின்றனர். இந்த கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி, PIB Fact Check அறிவுறுத்தியுள்ளது. டெலிகாம் அதிகாரிகள் இப்படி போன் செய்வதில்லை என்றும், அழைப்பு வந்தால் cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்.

News November 10, 2025

‘அம்மா SORRY.. என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்’

image

‘அம்மா என்னை மன்னித்துவிடு. என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல. என் சாவிற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம்’. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரேஷ்மாவின் கடைசி வரிகள் இவை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தனது பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News November 10, 2025

தேர்தலில் EPS-க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: RS பாரதி

image

பாஜகவுக்காக EPS நடத்திய அடிமை ஆட்சியால், நீட் முதல் மின்சாரம் வரை தமிழகத்தின் உரிமைகளை இழந்துள்ளதாக RS பாரதி விமர்சித்துள்ளார். மாநில மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் தரும் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் EPS வக்காலத்து வாங்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு துணை போகும் EPS-க்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!