News August 8, 2024

ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்போம்: சேகர்பாபு

image

ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் பழனியில் நடைபெறும் அனைத்துலக முருகன் மாநாடு தொடர்பாக பேசிய அவர், இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது என்று கூறினார். மேலும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு எப்போதும் தலையிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

SIR பணிகளில் திமுக தலையிடுகிறது: அதிமுக

image

SIR பணிகளை, திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. SIR படிவங்கள் மூலம் பிற கட்சி வாக்குகளை நீக்குவதாகவும், அதிகாரம் & பண பலத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து திமுக இதை செய்வதாகவும் சாடியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

BREAKING: விலை தாறுமாறாக மாறியது

image

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹6 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி கிலோ ₹104-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால், தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை உயர்கிறது. அதேபோல், முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.95-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

News November 16, 2025

₹44,900 சம்பளம், இன்றே கடைசி: APPLY NOW!

image

புலனாய்வு துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 258 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மேலும் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!