News April 14, 2025

சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

image

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.

Similar News

News December 3, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

image

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.

News December 3, 2025

சிகரெட் விலை உயர்கிறது

image

புகையிலை & புகையிலை சார்ந்த பொருள்கள் மீது கூடுதல் கலால் வரி விதிக்கும்பொருட்டு, மத்திய கலால் வரி திருத்த மசோதா 2025, லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சிகரெட்களின் விலை, அதன் நீளம், வகையை பொறுத்து 1,000 சிகரெட்களுக்கு ₹2,700 – ₹11,000 வரை உயர்கிறது. இதனால் சிகரெட்டுகளின் விலை ₹2 வரை உயரலாம் என கூறப்படுகிறது. மெல்லும் புகையிலை பொருள்களான பான் மசாலா உள்ளிட்டவை கிலோவுக்கு ₹100 உயர்கிறது.

News December 3, 2025

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

image

டிச.9, 11-ல் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இடுக்கி, பாலக்காடு, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பொறுப்பாளர்களை EPS நியமித்துள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற அப்பகுதியில் வலுவானவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!