News April 14, 2025

சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

image

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.

Similar News

News December 9, 2025

ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக

image

ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதியில் இருந்து, டிச.18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், 25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 9, 2025

ECI-ஐ வைத்து ஜனநாயகத்தை சிதைக்கும் மத்திய அரசு: ராகுல்

image

உடனே SIR பணிகளை நிறுத்த வேண்டும் என லோக் சபாவில் நடத்த விவாதத்தில், ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பிரேசில் மாடல் போட்டோ இந்திய வாக்காளர் பட்டியலில் வந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்தை சிதைப்பதற்காக ECI-ஐ பயன்படுத்துகிறது மத்திய அரசு என்றும் அவர் விமர்சித்துள்ளார். அனைத்து இந்திய அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News December 9, 2025

மகளிர் உரிமைத் தொகை ₹1,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக் கணக்கில் இன்னும் 3 நாள்களில்(டிச.12) ₹1,000 வரவு வைக்கப்பட உள்ளது. சென்னையில் CM ஸ்டாலின் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவுள்ளார். திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ₹1 அனுப்பி ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!