News April 14, 2025
சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
Similar News
News January 2, 2026
சிக்னல் கவலை இனி இல்லை! BSNL-ன் புதிய சேவை!

BSNL வாடிக்கையாளர்கள் இனி எங்கேயாவது சிக்னல் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இதற்கான தீர்வாக ‘வைஃபை காலிங்’ (VoWiFi) வசதியை, இந்தியா முழுவதும் BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மொபைலில் சிக்னல் குறைவாக இருந்தாலும், வீட்டிலோ அல்லது வெளியிலோ, எந்த நிறுவனத்தின் WiFi இணைப்பையும் பயன்படுத்தி போன் பேசலாம். போன் செட்டிங்ஸில் இந்த ஆப்ஷனை ஆன் செய்தாலே போதும், எந்த தடையுமின்றி பேசலாம்! SHARE
News January 2, 2026
BREAKING: பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய அறிவிப்பு

அரையாண்டு லீவுக்கு பிறகு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். *குடிநீர் தொட்டிகள், சத்துணவு கூடங்கள், பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். *இலவச நோட்டு, புத்தகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News January 2, 2026
திராவிடம் தமிழனுக்கு எதிரானது அல்ல: திருமா

இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தல், சமத்துவத்திற்கும் சனாதனத்திற்கும் இடையிலானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் வைகோ நடைபயண தொடக்க விழாவில் பேசிய அவர், சனாதனத்தை வீழ்த்த CM மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை; அது தமிழ் மொழியை காக்கக் கூடியது என்றும் முழங்கியுள்ளார்.


