News April 14, 2025
சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
Similar News
News January 1, 2026
2026 எப்படி இருக்கும்? கணிப்புகள் வெளியானது

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். 2025-ம் ஆண்டில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும், பூகம்பங்கள் ஏற்படும், வெள்ளம் வரும், வேலையின்மை அதிகரிக்கும் என கணித்திருந்தார். இந்நிலையில் 2026-க்கான இவருடைய கணிப்புகளை செய்தியாக தொகுத்துள்ளோம். அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.
News January 1, 2026
காய்கறிகளின் விலை மளமளவென குறைந்தது

புத்தாண்டு நாளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேட்டில், 1 கிலோ பெரிய வெங்காயம் ₹30-க்கும், சின்ன வெங்காயம் ₹60 – ₹75-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதேபோல், தக்காளி(₹40-₹50), உருளை கிழங்கு(₹20-₹25), பீன்ஸ்(₹30-₹40), கேரட்(₹40-₹45), பச்சை மிளகாய்(₹30-₹35) உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இதேபோல், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் வழக்கத்தைவிட காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது.
News January 1, 2026
காங்கிரஸை புண்படுத்தும் நோக்கம் இல்லை: வைகோ

கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் கூற மாட்டோம் என
வைகோ கூறியுள்ளார். காங்., <<18721191>>உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம்<<>> என MP மாணிக்கம் தாகூர் பேசியதற்கு பதிலளித்த அவர், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் மதிமுகவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.


