News April 14, 2025
சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
Similar News
News December 8, 2025
BREAKING: விடுமுறை… வந்தது மகிழ்ச்சியான அறிவிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பை – திருவனந்தபுரம் ரயில், டிச.18- ஜன.8 வரை (வியாழன் மட்டும்) இயக்கப்படும். மறுமார்க்கத்தில் டிச.20 – ஜன.10 வரை (சனி மட்டும்) இயக்கப்பட உள்ளது. அதேபோல், மைசூரு – தூத்துக்குடி ரயில் டிச.23, டிச.27 ஆகிய நாள்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், டிச.24, டிச.28-ல் ஓடும். பிளான் பண்ணிக்கோங்க நண்பர்களே!
News December 8, 2025
குழந்தைகளுக்கு இந்த Snacks கொடுக்காதீங்க!

குழந்தைகளுக்கு சாப்பாடு பிடிக்கிறதோ இல்லையோ, நொறுக்குத் தீனி சாப்பிட ரொம்ப பிடிக்கும். அவர்கள் அடம்பிடித்து கேட்பதால் பெற்றோர்களும் சிப்ஸ், பிஸ்கெட், சாக்லேட், பர்கர் என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வாங்கி கொடுத்துவிடுவர். இதனால் அவர்களுக்கு இளம்வயதிலேயே சுகர், உடற்பருமன் பிரச்னைகள் வருகிறது. எனவே, இதற்கு பதிலாக பழங்கள், நட்ஸ், சோளம் உள்ளிட்ட ஹெல்தியான பொருள்களை கொடுங்கள். SHARE.
News December 8, 2025
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் நுழைந்த பிரக்ஞானந்தா

FIDE Circuit-ல் 115 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார். இந்த ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


