News August 25, 2024
மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்!

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான போலி NCC பயிற்சியாளர் சிவராமன் & அவரது தந்தையின் மரணம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தை சிவராமனால் தனியாக செய்திருக்க முடியாது என்றும் பின்னணியில் உள்ளவர்களை தப்ப வைக்க சதி ஏதேனும் நடந்துள்ளதா எனவும் எழும் ஐயங்களைத் தீர்த்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Similar News
News December 6, 2025
இந்தியா மிக முக்கிய கூட்டாளி: USA

USA வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அத்துடன் இந்தோ-பசுபிக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதால் IND-USA இணைந்து செயல்படுவது இன்றியமையாதது என கூறப்பட்டுள்ளது. மேலும், புடினின் இந்திய பயணத்திற்கு பிறகு USA இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
டிச.19-ல் இலவச லேப்டாப் வழங்கும் CM ஸ்டாலின்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 19-ம் தேதி CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நந்தனத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு CM ஸ்டாலின் லேப்டாப் வழங்க உள்ளார். 2026 பிப். மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு 3 நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கீடு செய்துள்ளது.
News December 6, 2025
BREAKING: விஜய் கட்சியில் இணையவில்லை

விஜய்யுடன் இணையவிருப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என Ex அமைச்சரும், OPS அணி MLA-வுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார். OPS அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதன் பின்னர், தவெகவில் இணைந்த செங்கோட்டையன், வைத்திலிங்கத்திற்கு அழைப்பு விடுத்ததாக பேசப்பட்டது. பேரவைத் தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக்கட்சியினரை வளைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.


