News August 25, 2024
மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்!

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான போலி NCC பயிற்சியாளர் சிவராமன் & அவரது தந்தையின் மரணம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தை சிவராமனால் தனியாக செய்திருக்க முடியாது என்றும் பின்னணியில் உள்ளவர்களை தப்ப வைக்க சதி ஏதேனும் நடந்துள்ளதா எனவும் எழும் ஐயங்களைத் தீர்த்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Similar News
News December 8, 2025
புதிய ரேஷன் கார்டு.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 55,000 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி 1.08 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அதனை பரிசீலனை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் நீடிப்பதாக புகார் எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
நடிகை பாலியல் வழக்கு: கடந்து வந்த பாதை!

★2017-ல் காரில் கடத்தப்பட்டு நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக, 6 பேர் கைதாகினர் ★<<18502283>>நடிகர் திலீப்<<>> தூண்டுதலின் பேரில், இது நடந்ததாக போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவரும், அவரது நண்பர் 7 & 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர் ★சிறப்பு புலனாய்வுக் குழு சமர்பித்த ஆதாரங்களின் பேரில் சுனில், மார்டின் ஆண்டனி உள்பட 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது ★தண்டனை விவரம் 12-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
News December 8, 2025
இந்தியாவில் MNC அதிகம் விரும்பும் நகரம் இதுதான்!

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் IT, தொழில்நுட்ப & Management பணிகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் உருவாக்கும் செயல்முறை மையங்களை Global Capability Center என்பார்கள். இதில், இந்தியாவில் எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள படத்தை வலது பக்கமாக Swipe செய்யவும்.


