News August 25, 2024
மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்!

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான போலி NCC பயிற்சியாளர் சிவராமன் & அவரது தந்தையின் மரணம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தை சிவராமனால் தனியாக செய்திருக்க முடியாது என்றும் பின்னணியில் உள்ளவர்களை தப்ப வைக்க சதி ஏதேனும் நடந்துள்ளதா எனவும் எழும் ஐயங்களைத் தீர்த்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Similar News
News November 15, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்து ₹92,400-க்கும், கிராமுக்கு ₹190 குறைந்து ₹11,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News November 15, 2025
காங்கிரஸை கலைத்து விடுங்கள்: KTR

பிஹார் தேர்தல் முடிவை போன்று தான் தமிழகத்திலும் முடிவு இருக்க போகிறது என்று KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காங்., கட்சியை கலைத்து விடுங்கள் என்று கூறிய அவர், நாட்டுக்கும் ஊருக்கும் காங்., ஆகாது என்றும் விமர்சித்தார். வீணாய்ப் போன காங்., கட்சியை திமுக தான் தூக்கிப் பிடிக்கிறது என்றும் காட்டமாக தெரிவித்தார். பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது.
News November 15, 2025
100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை

₹2,000 உதவித்தொகையை ₹6,000 ஆக உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களை அழைத்து பேசினார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கூறும்போது, உதவித்தொகை ₹1,000 உயர்த்தப்படும்; மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும் என தலைமை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.


