News August 25, 2024
மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்!

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான போலி NCC பயிற்சியாளர் சிவராமன் & அவரது தந்தையின் மரணம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தை சிவராமனால் தனியாக செய்திருக்க முடியாது என்றும் பின்னணியில் உள்ளவர்களை தப்ப வைக்க சதி ஏதேனும் நடந்துள்ளதா எனவும் எழும் ஐயங்களைத் தீர்த்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Similar News
News December 10, 2025
TN-ல் அடுத்த 100 நாள்களில் தேர்தல்: CV சண்முகம்

அதிமுகவை அழிக்க சில அரசியல் புரோக்கர்கள் முயற்சி செய்வதாக EX அமைச்சர் CV சண்முகம் விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 100 நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், உறவாடி கெடுப்பவர்களிடம் அதிமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், நேரடி எதிரிகள், மறைமுக துரோகிகளுக்கு வரும் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டப்படும் என சூளுரைத்தார்.
News December 10, 2025
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ₹750 மதிப்பில் 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பு வரும் 3-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.
News December 10, 2025
ஷூட்டிங்கே போகல.. அதுக்குள்ள ₹80 கோடி லாபம்!

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி வரை லாபம் கிடைத்து விட்டதாம். படத்தின் வெளிநாட்டு உரிமம், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை விற்கப்பட்டு, இந்த ஜாக்பாட் சூர்யாவுக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யா – ஜித்து மாதவன் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதையும் இது காட்டுகிறது.


