News April 28, 2025
இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!

இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிஷா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 9, 2025
தருமபுரி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
புதுச்சேரியில் கூட்டணி உறுதியாகிறதா? VIRAL PHOTO

புதுச்சேரியில் இன்று தவெக பரப்புரையில், விஜய், CM ரங்கசாமி இருவரும் உள்ள போட்டோ ஃபிரேம் பேசுபொருளாகியுள்ளது. விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரங்கசாமியுடன் நட்பு பாராட்டி வந்தார். புதுச்சேரியில் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதற்கும் CM பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போட்டோ மூலம் கூட்டணி உறுதியாகுமா என தொண்டர்கள் கேட்டு வருகின்றனர். தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையுமா?
News December 9, 2025
பிரபல தமிழ் நடிகை திருமணம் நிறுத்தமா?

நிவேதா பெத்துராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம், நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறி காதலர் ரஜித் இப்ரானுடனான போட்டோக்களை பதிவிட்டார். இந்நிலையில், திடீரென SM பக்கங்களில் இருந்து நிச்சயதார்த்த போட்டோக்களை நீக்கியுள்ளது, ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜித்தும், தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து போட்டோக்களை நீக்கியுள்ளார். இந்நிலையில், திருமணம் நின்றுவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


