News April 22, 2025
தங்கம் போல் உயரும் எலுமிச்சை: கிலோ ₹150

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இளநீர், எலுமிச்சை என பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் தாகம் தணிக்க நம்புவது எலுமிச்சை ஜூஸ்தான். இந்தச் சூழலில், ஒரு கிலோ எலுமிச்சை விலை ₹150 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ ₹120க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News April 22, 2025
19 ஆண்டுகளாக தூங்கும் சவுதி இளவரசர்!

சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித், 36 வயதை எட்டியுள்ளார். 19 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அவர் ‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். 2005-ல் நடந்த விபத்தில் மூளையில் காயம் ஏற்படவே, சுயநினைவை இழந்தார். வெண்டிலேட்டர் துணையுடன், டாக்டர்களின் முழுநேர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறார். 2019-ல், அவரது கை விரல்களும், தலையும் லேசாக அசைந்தன. அதையடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை.
News April 22, 2025
இன்றே சிறை தண்டனை.. இன்றே விடுதலை!

முன்னாள் AUS கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டருக்கு இன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்றே விடுதலையும் செய்யப்பட்டார். குடும்ப வன்முறை, பெண்ணை பின் தொடர்ந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 2024 ஏப்ரலில் கஸ்டடியில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 375 நாள்கள் கஸ்டடி காலத்தில் அவர் ஒழுக்கமாகவும், விதிகளை பின்பற்றியதாகவும் கூறி அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
News April 22, 2025
தீவிரவாத தாக்குதல்.. ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.