News April 5, 2024
எலுமிச்சை கிலோ ₹130

கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் எலுமிச்சை பழம் விலை கிலோ ₹130 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 100 டன் எலுமிச்சை பழங்கள் கொண்டுவரப்படும். தற்போது கோடை சீசனையொட்டி தேவை அதிகரித்துள்ள சூழல் எலுமிச்சை வரத்து 40 டன்னாக குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் கிலோ ₹100, சில்லறையாக கிலோ ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News March 12, 2026
பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்

வேலூருக்குட்பட்ட சாத்துமதுரை, அணைக்கட்டுக்குட்பட்ட பின்னத்துரை, காட்பாடிக்குட்பட்ட கொண்டேரிபள்ளி, குடியாத்தத்திற்குட்பட்ட பெரும்பாடி, கே.வி.குப்பத்திற்குட்பட்ட வேப்பங்கநேரி, பேரணாம்பட்டுக்குட்பட்ட எருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில் வருகிற 14-ந் தேதி பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.
News March 12, 2026
தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 12, 2026
கேஸ் சிலிண்டர் பதுக்கல்.. TN-ல் முதல் முறையாக கைது!

கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு <<19343866>>அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை(ECA)<<>> அமல்படுத்தியது. அதன்படி, கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்தால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், TN-ல் முதல் முறையாக நெல்லையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17 சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாக்கிரதை!


