News April 8, 2024
சமூக செயற்பாட்டாளர்கள் மீது சட்ட ஒடுக்குமுறையா?

மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, குற்றவியல் சட்டம் (Cr.P.C) 110 பிரிவின் கீழ், கோவையில் 350 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மனித உரிமை வழக்குரைஞர் ரகுநாத், “இந்த வழக்குகள் பெரும்பாலும் சமூக செயற்பாட்டாளர்கள், தலித் & இஸ்லாமிய இளைஞர்கள் மீது பதியப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் போராடுவோரை ஒடுக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News July 7, 2025
இந்திய வம்சாவளிக்கு பொறுப்பு: எலான் மஸ்க் அதிரடி

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜாவை நியமித்துள்ளார். டெல்லியில் பிறந்த இவர், தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைகழகத்தில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 8 வருடங்களாக டெஸ்லாவில் பணிபுரிந்தும் வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் நியமிப்பதா என எலான் மஸ்க் மீது விமர்சனங்களும் வந்துள்ளன.
News July 7, 2025
இன்றைய நேரம் நல்ல நேரம்

▶ஜூலை 7- ஆனி – 23▶ கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News July 7, 2025
காதலரைக் கடத்தும் பெண் வீட்டார்.. வினோத பழக்கம்

மேகாலயாவில் உள்ள காரோ பழங்குடியினரிடம் ஒரு வித்தியாசமான திருமண பழக்கம் பின்பற்றப்படுகிறது. ஒரு பெண்ணே தனது காதல் விருப்பத்தை முதலில் வெளிப்படுத்துகிறார். தனக்கு பிடித்த நபர் யார் எனக் கூறினால், அவளது உறவினர்கள் அந்த நபரை பிடித்துக்கொண்டு பெண் வீட்டுக்கு வருகின்றனர். இதனையடுத்து, அவருக்கு அப்பெண்ணை பிடித்தால் அடுத்த கட்டத்திற்கு திருமணம் செல்லும். இல்லையெனில் கைவிடப்படும். இது எப்படி இருக்கு?