News April 7, 2024
கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்திருக்கிறது. அன்றைய தினம், கல்வி நிலையங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் செயல்படாது.
Similar News
News July 6, 2025
2026 சட்டமன்றத் தேர்தலில் பின்வாங்குகிறதா பாஜக?

நமது இலக்கு 2026 தேர்தல் அல்ல; 2029 லோக்சபா தேர்தல் என நயினார் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலுக்கான வியூகத்தை அமித்ஷா பார்த்து கொள்வார் எனவும் 2029 தேர்தலில் அதிக MPக்களை பார்லிமென்ட்டுக்கு அனுப்புவதே நமது இலக்கு என்றார். நயினாரின் இந்த பேச்சு, அதிமுகவின் நிபந்தனைகளுக்கு பாஜக பச்சைக்கொடி கட்டுவதையே உணர்த்துவதாக பேசப்படுகிறது.
News July 6, 2025
தமிழக அரசில் 2,299 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.4. திறனறிவு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை நேரடியாக பெறலாம். Share it!
News July 6, 2025
முடிவுக்கு வருகிறதா பாமக பிரச்னை?

ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஜூலை 8-ல் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதனால், தந்தை – மகன் இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வரவிருப்பதாக பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.