News April 19, 2024
வாக்களிக்க உடனே புறப்படுங்க

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 30 நிமிடங்களில் வாக்குப் பதிவுக்கான நேரம் நிறைவடைய உள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் வாக்குப் பதிவு மந்த நிலையிலேயே இருந்து வந்தது. வெயில் காரணமாக சிலர் வாக்களிக்க வராத நிலையில், தற்போது வெயில் குறையத் தொடங்கியுள்ளதால் மக்கள் அனைவரையும் தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
Similar News
News January 19, 2026
விஜய்யிடம் CBI அடுக்கிய கேள்விகள்.. கசிந்தது தகவல்!

கரூர் வழக்கில் விஜய்யை விசாரிக்கும் CBI, அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு முறையான நடைமுறையை பின்பற்றாததே காரணம் என தவெக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன்பிறகு விஜய்யிடம் கேள்விகளை அடுக்கிய CBI, கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டிலை வீசியபோது நெரிசலை பார்க்கவில்லையா? தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது ஏன்? கீழே நிலைமை மோசமானது தெரியவில்லையா என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது
News January 19, 2026
சிறுவன் கைகளில் மும்பை மேயர் பதவி!

தேர்தல் முடிந்தாலும், மும்பை மேயர் யார் என்பது சஸ்பென்ஸாக இருக்க காரணம் அங்குள்ள குலுக்கல் முறை! மும்பை மேயர் பதவி 2.5 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு (பெண்/SC/ST/OBC/பொது) செய்யப்படும். சீட்டு எழுதி குலுக்கி போட்டு, மாநகராட்சி பள்ளி சிறுவன் ஒருவன் எடுப்பான். அதில் வரும் பிரிவை சேர்ந்த வேட்பாளர்களில் இருந்து மேயர் தேர்வு செய்யப்படுவார். அடுத்தவாரம் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.
News January 19, 2026
BREAKING: செங்கோட்டையன் முடிவை மாற்றினார்

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக Ex அமைச்சர்கள் இருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், அவர்கள் பிடி கொடுக்காததால், தனது கவனத்தை தற்போது திருப்பூரை சேர்ந்த ஒரு Ex அமைச்சரின் பக்கம் திருப்பியுள்ளார். குறிப்பாக, வரும் தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் அந்த Ex அமைச்சர், EPS மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


