News March 18, 2025

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

image

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 18, 2025

தங்கம் விலை உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹66,000க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹8,250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி, கிராமுக்கு ₹113க்கு விற்கப்படுகிறது.

News March 18, 2025

ரஷ்யா, பிரான்ஸை ஓரங்கட்டிய இந்தியா!

image

2024ல் அதிக அதிகாரமிக்க நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. அதுவும் ரஷ்யா, பிரான்ஸ், UKவை ஓரங்கட்டி 0.30 புள்ளிகள் பெற்று முன்னேறி இருக்கிறது. எப்போதும் போல, 0.89 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 0.80 புள்ளிகளுடன் சீனா 2வது இடத்திலும் நீடிக்கின்றன. பொருளாதாரம், ராணுவம், முதலீட்டு மூலதனத்தை கொண்டு நாடுகளின் பலம் கணக்கிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

வங்கிகளில் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன் விலக்கு

image

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன்களை, தங்கள் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இக்கடன்கள் தள்ளுபடியல்ல என்றும், அவற்றைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாராக்கடனில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ₹9.27 லட்சம் கோடி ஆகும்.

error: Content is protected !!