News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2025
அதனால்தான் அவர் தோனி: ஹர்பஜன்

40 வயதைத் தாண்டிய பிறகும், தோனி சிறப்பாக விளையாடுவதற்கு, கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடுதான் காரணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வயதில் ஐபிஎல்லில் விளையாட ஃபிட்னஸ் வேண்டும் எனவும், அதற்கு தோனி கடுமையாக உழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தினமும் 2-3 மணி நேரம் தோனி பேட்டிங் பிராக்டிஸ் செய்வதாகவும், அதுதான் மற்ற வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 18, 2025
இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 100 பேர் பலி

காசா, லெபனான், சிரியா பகுதிகளில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க மறுத்ததாகக் கூறி இஸ்ரேல் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக, ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜனவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், தற்போது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
News March 18, 2025
கிசுகிசுவை விட அதுதான் மறக்க முடியாத வலி: ஷாம்

சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், தன்னைப் பற்றி கிசுகிசு வந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். ஆனால் அதைவிட, ஒரு இயக்குநர் செய்ததுதான், தன் வாழ்வில் மறக்க முடியாதது என அவர் கூறியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுக்க ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து ₹3.5 கோடி வாங்கி கொடுத்ததாகவும், அதில் ₹1.5 கோடியை இயக்குநர் வைத்துக் கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.