News March 18, 2025

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

image

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 6, 2025

கரூரில் தொடரும் செந்தில் பாலாஜியின் வேட்டை!

image

கரூர், கோவையில் மாற்றுக் கட்சியினரை திமுகவுக்குள் இழுக்கும் பணியைச் செந்தில் பாலாஜி தீவிரப்படுத்தியுள்ளார். <<16877469>>கடந்த வாரம்<<>> மதிமுக, அதிமுக, தவெக, தேமுதிக நிர்வாகிகள் பலரையும் திமுகவில் இணைத்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 6) கரூர் பஞ்சமாதேவி பகுதியில் அதிமுக கிளை அவைத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட அதிமுக, தவெகவினர் பலரும் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

News July 6, 2025

வீண் செலவு செய்கிறதா மின்வாரியம்?

image

தமிழகத்தில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ள நிலையில், மின் வாரியம் 11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்க ₹160 கோடி செலவில் பணி ஆணைகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சாதாரண மீட்டர்கள் வீணாகலாம் என்றும், இது தேவையற்ற செலவு என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News July 6, 2025

தமிழர் வரலாற்றை விரும்பாத திராவிடர்கள்: சீமான்

image

தமிழர்கள் எப்போதும், பழம்பெருமை பேசுவார்களே என திராவிடர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழர் வரலாற்று பெருமை பேசுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று சீமான் விமர்சித்துள்ளார். வரலாறு என்பது ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் வழித்தடம். தமிழரின் அடையாளங்களை மறைத்தால்தான் திராவிடத்தால் அரசியல் செய்ய முடியும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர் என்று கடுமையாக சாடினார்.

error: Content is protected !!