News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2025
காய்கறிகளின் விலை குறைந்தது

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது.
அவரை (கிலோ) ₹35, வெண்டை ₹35, பீன்ஸ் ₹30, பீட்ரூட் ₹35, பாகற்காய் ₹35, கத்தரிக்காய் ₹55, முட்டைக்கோஸ் ₹30, உருளைக்கிழங்கு ₹40, முருங்கைக்காய் ₹60, கொத்தமல்லி ₹40, புடலங்காய் ₹30, தக்காளி ₹15க்கும், பீர்க்கங்காய் ₹18, சுரைக்காய் ₹15, முள்ளங்கி ₹15, சின்னவெங்காயம் ₹36க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 18, 2025
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
News March 18, 2025
மொத்த விலை பணவீக்கம் உயர்வு

நாட்டின் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும், கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20% ஆகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. சமையல் எண்ணெய் 33.59%, குளிர்பானங்கள் 1.66% ஆகவும் உயர்ந்துள்ளன.