News April 11, 2025

கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

image

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.

Similar News

News December 22, 2025

உன் மேல ஒரு கண்ணு கீர்த்தி சுரேஷ்

image

தனது கியூட்டான முக பாவனைகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கீர்த்தி சுரேஷ், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில், கருப்பு உடையில் அவரது போஸ், மனதில் அடைமழை பொழிகிறது. அவரது சிரிப்பு, மலர் குடையாய், பகல் நிலவாய் நெஞ்சில் தீயை மூட்டுகிறது. கண் மூடும்போது, கண் முன்னே அழகாய் ஒளிர்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தால் ஒரு லைக் போடுங்க.

News December 22, 2025

மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த திமுக திட்டம்!

image

மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். <<18640200>>கனிமொழி தலைமையில்<<>> திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் வழங்கப்படும் ₹1,000 உரிமைத்தொகையை ₹1,500 ஆக உயர்த்தலாம் என பேசப்பட்டதாக தெரிகிறது. 2021 தேர்தலின்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ₹1,500 இடம் பெற்றிருந்தது.

News December 22, 2025

கரும்புள்ளிகளால் கவலையா? சரி செய்வது ஈஸி

image

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் காரணமாக அழகு குறைந்ததாக நினைக்கிறார்களா? இதனை சரி செய்ய பல எளிய வழிகள் இருக்கின்றன. அவை ➤எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி, காலையில் கழுவவும் ➤மஞ்சள் மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் போல கரும்புள்ளியில் தடவலாம். இதனை தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் என கூறுகின்றனர். SHARE.

error: Content is protected !!