News April 11, 2025
கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.
Similar News
News December 28, 2025
புத்தாண்டு ராசிபலன் 2026: ரிஷபம்

லாப ஸ்தானத்தில் சனி, தன ஸ்தானத்தில் குரு உள்ள நிலையில் புத்தாண்டு பிறப்பதால், நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள் *வாழ்க்கை துணையின் உடல், மனநலனில் அக்கறை கொள்ளுங்கள் *தேவையற்ற கடன்களை வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள் *உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் *வெளிநாடு சென்று பயிலும் கனவு கைகூடும் *ஆரோக்கியத்தில் கவனம் தேவை *நீண்ட நாள் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும்.
News December 28, 2025
உதயநிதியால் 8 திமுக அமைச்சர்களுக்கு சிக்கலா?

தேர்தலில் இளைஞர்களை களமிறக்க துடிக்கும் உதயநிதியின் முடிவால் சிட்டிங் அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வயது அடிப்படையில் 5 அமைச்சர்களுக்கும், கட்சியில் நிலவும் உள்ளடி மோதல்களால் மூவருக்கும் சீட் மறுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்தாலும் காரியம் ஆகவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். அந்த 8 பேர் யாராக இருக்கும்?
News December 28, 2025
சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: அன்புமணி

தமிழகத்தில் என்ன நடக்கிறது என CM ஸ்டாலினுக்கே தெரியவில்லை என அன்புமணி சாடியுள்ளார். நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் தான் கனிமவளக் கொள்ளை அதிகமாக நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த CM மறுக்கிறார் எனவும், அதனால் திமுகவுக்கு சமூகநீதி பேசத் தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


