News April 11, 2025

கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

image

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.

Similar News

News December 21, 2025

வங்கதேசத்தில் விசா மையத்தை மூடிய இந்தியா

image

இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், சிட்டகாங்கில் உள்ள விசா மையத்தை காலவரையின்றி மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, டாக்காவில் உள்ள <<18599347>>விசா மையத்தையும்<<>> இந்தியா தற்காலிகமாக மூடியது.

News December 21, 2025

பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

image

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை வரும் புதன்கிழமையுடன் தொடங்கவுள்ளது. டிச.10-ல் தொடங்கிய தேர்வுகள் நாளை மறுநாளுடன் நிறைவடைகின்றன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல <<18633529>>சிறப்பு பஸ்களும்<<>> இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE IT.

News December 21, 2025

புதிய ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. HAPPY NEWS

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட இருப்பதால், எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் என புதிதாக விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 21 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளனர். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும்.

error: Content is protected !!