News April 11, 2025
கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.
Similar News
News December 20, 2025
ராணிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கைது

ராணிப்பேட்டையில் பாஜக மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை அங்குள்ள ஒரு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற போது போலீசார் இங்கு தொழுக வேண்டாம். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கருத்தில் கொண்டு போலீசார் தெரிவித்தனர்.ஆனால் வேலூர் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வேன் என்று கட்டாயத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
News December 20, 2025
சனிக்கிழமை விரதத்தால் கிடைக்கும் பலன்!

பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படும் சனிக்கிழமையில், விரதம் கடைபிடித்தால் நினைத்த காரியம் கைகூடும் என நம்பப்படுகிறது. பகலில் பழமும், நீர் மட்டும் அருந்தி, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்தால் சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து, பெருமாள் நம்மை காப்பார் என்பது ஐதீகம்.
News December 20, 2025
பொங்கலுக்குள் கூட்டணியை இறுதி செய்ய NDA தீவிரம்

தஞ்சை (அ) மதுரையில் நடைபெறவுள்ள பாஜகவின் பொங்கல் விழாவில் NDA கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் வெளிப்பாடே பாஜக – அதிமுக முக்கிய தலைவர்கள் மாறி மாறி டெல்லி மேலிடத்தை சந்தித்து வருகின்றனர். NDA-வில் தற்போது அதிமுக, பாஜக, தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளன. மேலும், பாமக, தேமுதிக, அமமுக, OPS அணியை விரைவாக கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.


