News April 11, 2025
கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.
Similar News
News November 1, 2025
எந்த நாட்டில் அதிக யானைகள் உள்ளன தெரியுமா?

யானை ஒரு அழகான, மென்மையான, புத்திசாலிதனமான உயிரினம். அதன் பெரிய உடலும் நீண்ட தும்பிக்கையும் வலிமையை காட்டினாலும், குழந்தை மனம் கொண்டது. யானைகள் காடுகளில் பசுமையை காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. இயற்கையின் நண்பனான யானைகள், எந்த நாட்டில் அதிகமாக உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News November 1, 2025
BREAKING: மகாதீபம் விடுமுறை.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மகா தீபத்திற்கு தி.மலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இந்தாண்டு டிச.3-ல் விடுமுறை மகா தீபம் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து 4,764 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, தி.மலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வேயும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. SHARE IT
News November 1, 2025
மிரள வைக்கும் ஹாலோவீன் திருவிழா

அமெரிக்காவில் ஹாலோவீன் திருவிழா உலகம் முழுவதும் பிரபலமானது. அந்நாளில் மக்கள் வித்தியாசமான பேய், பூதம், சூனியக்காரி போல ஆடையணிந்து தெருக்களில் கொண்டாடுகின்றனர். பயமும், மகிழ்ச்சியும் கலந்த ஹாலோவீன், சிறந்த கேளிக்கை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு ஹாலோவீன் திருவிழா போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது?


