News June 24, 2024
விதவை சடங்குகளை ஒழிக்க சட்டம்: 84% பெண்கள் விருப்பம்

நாகையை சேர்ந்த என்ஜிஓ அமைப்பு, தமிழகம் முழுவதும் விதவைப் பெண்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 84.2% பெண்கள், கணவர் இறப்புக்குப்பின், தங்களை காலையில் கோயில் குளத்துக்கு அழைத்து சென்று குளிக்கச்செய்து, பொட்டு, பூக்கள் அகற்ற செய்யும் சடங்குகளைத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென, அவர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
இன்றைய போர்களை கணிக்க முடியவில்லை: ராஜ்நாத் சிங்

கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்தியல், உயிரியல், கண்ணுக்கு தெரியாத சவால்களை எதிர்கொள்ள நமது ஆயுத படைகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்றைய போர்கள் திடிரென ஏற்பட்டு, கணிக்க முடியாதவையாக மாறுவதாகவும், எனவே நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
News September 17, 2025
காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
News September 17, 2025
ஆயுத பூஜைக்கு அருள் தரும் ‘கருப்பு’

ஆயுத பூஜை அன்று ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் அன்றே வெளியாக உள்ளதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பியில் இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாய் அபயங்கர் பின்னணி இசை பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.