News December 11, 2024
பழிவாங்கலுக்கு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது: SC தீர்ப்பு

மனைவி கொடுமைப் படுத்துவதாக கூறி <<14842776>>கணவன் தற்கொலை<<>> செய்துகொண்டது விவாதமாகி உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவனையும், அவரது குடும்பத்தினரையும் பழிவாங்க சட்டப்பிரிவு 498A தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதி நாகரத்னா தீர்ப்பளித்துள்ளார். இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
Similar News
News September 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 14, 2025
பவன் செஹ்ராவத்தை நீக்கிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செஹ்ராவத்தை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் X தள பதிவில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு அணியின் நடத்தை விதிமுறைகளுக்கு ஏற்ப, தேவையான பரிசீலனைக்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அவருக்கு பதில் அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக செயல்படவுள்ளார்.
News September 14, 2025
நிலைபாட்டை மாற்றிய இந்தியா

அணிசேரா நாடுகளின் தலைவனாக இந்தியா திகழ்ந்த காலத்தில், பாலஸ்தீன சுதந்திரத்துக்கு தீவிர ஆதரவளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுடன் நெருக்கமான நிலையில், ஐநாவில் பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானம் வரும்போது வாக்கெடுப்புகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தது. ஆனால், நேற்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இந்தியா பழைய நிலைப்பாட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.