News October 7, 2025
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: PM மோடி

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக PM மோடி விமர்சித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்த BJP MP, MLA-க்கள் தாக்குதலுக்குள்ளானது, திரிணாமுல் காங்கிரஸின் உணர்வின்மையை காட்டுவதாக அவர் சாடியுள்ளார். மேலும் மேற்குவங்க அரசும், திரிணாமுல் காங்கிரஸினரும் வன்முறையில் ஈடுபடுவதை விடுத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று PM மோடி கேட்டுகொண்டுள்ளார்.
Similar News
News October 7, 2025
அரசியல் நோக்கத்தோடு PM செயல்படுகிறார்: மம்தா

மேற்குவங்கத்தில் <<17928599>>பாஜக MP தாக்கப்பட்டது<<>>, திரிணாமுல் காங்., ஆட்சியின் மோசமான நிலையை காட்டுவதாக PM மோடி சாடியிருந்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தை PM அரசியலாக்குவது கவலைக்குரியது என CM மம்தா பானர்ஜி ரிப்ளை கொடுத்துள்ளார். ஆதாரம் இல்லாமல் திரிணாமுல் காங்., மீதும், அதன் ஆட்சி மீதும் குற்றம்சாட்டுவதாக கூறிய அவர், விசாரணை மூலமாகவே யார் மீது தவறு என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
சிறுமி வன்கொடுமை: காமெடி நடிகர் கைது

சென்னையில் விடுதி ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சினிமா இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்து போனதால், அவரது தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனிமையில் தவித்த சிறுமியை கவனித்து வந்த, தாயின் தோழி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கிய கட்சியின் நிர்வாகியும் சிக்கியுள்ளார்.
News October 7, 2025
மூலிகை: வசம்பின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, வசம்பை தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்களும் நீங்கும் *விஷம் அருந்தியவர்களுக்கு உடனே வசம்பு தூளை கொடுத்தால், விஷம் முறிந்துவிடும் *வசம்பு பொடியுடன் கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து குடித்தால், சளி, இருமல், வயிறு உப்புசம் ஆகியவை நீங்கும். SHARE IT.