News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News December 29, 2025
புத்தாண்டு ராசிபலன் 2026: மிதுனம்

தசம கேந்திரமான 10-ம் இடத்தில் உள்ள சனி, ஜென்ம ராசியிலிருந்து தனஸ்தானத்திற்கு செல்லும் குரு, வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உள்ள கேது, தன் வீட்டை பார்க்கும் ராசியதிபதி புதன் என்ற அமைப்பில் தொடங்கும் இந்த புத்தாண்டு மிதுன ராசியினருக்கு பல மாற்றங்களை கொண்டு வரும் *திருமண தடைகள் அகலும் *குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு நல்ல செய்தி உண்டு *தொழிலில் இதுவரை பாடுபட்டதற்கான பலன்களை பெறுவீர்கள்
News December 29, 2025
பொங்கல் பரிசு பணம்.. அரசு தரப்பு வெளியிட்டது

<<18690697>>பொங்கல் பரிசுத் தொகுப்பு <<>>வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியிருந்தார். அத்துடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம் பொங்கல் பண்டிகை செலவுகளை கருதி, உரிமைத் தொகை ₹1,000-ஐ ஜன.9 (அ) 12-ம் தேதியே வங்கிக்கணக்கில் செலுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 29, 2025
மார்கழி திங்கள் ஸ்பெஷல் கோலங்கள்!

யோகா போல, கோலம் போடுவதும் உடல்நலன் காக்கும் கலைதான். குனிந்து, வளைந்து, அமர்ந்து கோலம் போடுவது ஆசனம் செய்வது போல்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து கோலம் போட்டால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்கழி திங்களன்று வீட்டு வாசலில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். Swipe செய்து பார்த்து அவற்றை வீட்டில் முயற்சிக்கவும்.


