News February 17, 2025

சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.

Similar News

News November 20, 2025

‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

image

டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது பள்ளி HM, ஆசிரியர்கள் மனரீதியாக டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதிவைத்துள்ளார். Sorry அம்மா பலமுறை உங்களை காயப்படுத்தி இருக்கிறேன், கடைசி முறையாக இப்போதும் அதை செய்துள்ளேன்; எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

இந்த எண்களை தெரியாமல் இருக்காதீங்க!

image

அவசர நேரத்தில் இந்த ஹெல்ப்லைன் எண்களை தெரிந்து வைத்திருப்பது உங்களது உயிரையே காக்கலாம். தீயணைப்புத்துறை – 101, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு- 181, குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் – 1098, குழந்தைகள் காணாமல் போனால்- 1094, ராகிங் தொல்லைக்கு ஆளானால்- 1800-180-5522, இலவச மருத்துவத்துக்கு – 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இது அனைவருக்கும் உதவும், கண்டிப்பாக SHARE THIS.

News November 20, 2025

மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரமில்லை: SC

image

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க 3 மாதங்கள் கெடு விதித்தது தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கான மனுவை SC-ன் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், அரசியல் சாசனத்தின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு 3 மாதங்களே அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!