News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News November 22, 2025
இனி தனியாரும் அணு மின்சக்தியில் காலூன்றலாம்!

வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், 10 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி, தேசிய நெடுஞ்சாலை, காப்பீடு என பல துறைகளில் மறுசீரமைப்பு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக, இதுவரை அரசு மட்டுமே தொடங்கி நடத்தி வந்த அணு மின் நிலையங்களை, இனி தனியாரும் நடத்தும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
News November 22, 2025
உலக VVIP-கள் கூடும் திருமணம்: யார் இந்த ராமராஜு?

டிரம்ப்பின் மகன் உள்ளிட்ட உலக பிரபலங்களே நேரில் வந்து வாழ்த்த, உதய்ப்பூர் பங்களாவில் தடபுடலாக தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார் தொழிலதிபர் ராமாராஜு. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Ingenus Pharmaceuticals நிறுவனத்தின் தலைவர் தான் ராமராஜு. அமெரிக்க மருத்துவ துறையில் இவர் நன்கு பரிச்சயமானவர். இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.
News November 22, 2025
தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP


