News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News December 25, 2025
ராணிப்பேட்டை: பன்றி கடித்து ஐந்து வயது சிறுமி படுகாயம்

தாஜ்புரா ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், இவரது மகள் சிவானி 5 இவர் தனது வீட்டின் அருகே இன்று (டிசம்பர் 25)ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது பன்றி கூட்டம் ஒன்று திடீரென அந்த வழியாக வந்தது. அதிலிருந்து ஒரு பன்றி சிவானியை முகம் உடல் என பல இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
News December 25, 2025
ATM-ல் பலமுறை CANCEL பட்டன் அழுத்துறீங்களா?

ATM மோசடியில் சிக்கக்கூடாது என்பதற்காக பணம் எடுத்த பிறகு பலமுறை CANCEL பட்டனை அழுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இந்த Cancel பட்டன் பரிவர்த்தனைகளை ரத்து செய்ய மட்டுமே, மோசடிகளை தடுக்க அல்ல என RBI தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்காமல் இருக்க, PIN நம்பரை மறைத்து உள்ளிடுங்கள். சந்தேகப்படும்படியாக சாதனங்கள் ATM மெஷினில் இருந்தால் வங்கியிடம் புகாரளியுங்கள். பலரது பணத்தை பாதுகாக்கும், SHARE THIS.
News December 25, 2025
வன்முறை கும்பலை அடக்குவது நம் கடமை: CM ஸ்டாலின்

சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணை இருப்பதில் தான் பெரும்பான்மையினரின் பலமும், குணமும் உள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். தனது X பதிவில், <<18667009>>ஜபல்பூர்-ராய்பூரில்<<>> சிறுபான்மையினரை வலதுசாரி கும்பல்கள் தாக்கியதாகவும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது நம் கடமை எனவும் CM பதிவிட்டுள்ளார். Xmas விழாவில் PM மோடி பங்கெடுக்கும்போதே, இவ்வாறு நடப்பது மக்களுக்கு தவறான செய்தியை சொல்லும் எனவும் கூறியுள்ளார்.


