News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News December 19, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் உத்தேச தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்புக்கு 2026 பிப்.23 முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 12-ம் வகுப்புக்கு பிப்.9 முதல் பிப்.14-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT
News December 19, 2025
பார்லிமென்டில் நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்!

குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அதில் 8 முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. *மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்ட ‘விக்சித் பாரத் G RAM G’ மசோதா *காப்பீட்டு துறையில் FDI முதலீட்டை 100% ஆக உயர்த்துவதற்கான ‘சப்கா பீமா சப்கி ரக்ஷா’ மசோதா, *பான் மசாலா, புகையிலை மீது சிறப்பு வரி விதிக்கும் செஸ் மசோதா, *அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ‘ஷாந்தி’, ஆகியவை நிறைவேறின.
News December 19, 2025
BREAKING: இந்திய அணி பீல்டிங்

இலங்கைக்கு எதிரான U-19 ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், 5 மணிநேரம் தாமதம் ஏற்பட்டதால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்தால், குரூப் ஸ்டேஜில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். வலுவாக உள்ள IND அணியை, SL அணி வீழ்த்துவது சற்று கடினமே.


