News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 13, 2025

இந்தியா மீதான டிரம்ப்பின் வரியை நீக்க தீர்மானம்

image

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50% வரியை முடிவுக்கு கொண்டுவர, US பிரதிநிதிகள் சபையின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரியை சட்டவிரோதமானது எனக்கூறிய டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி(இந்திய வம்சாவளி), இதனால் USA தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். வரியை நீக்கினால் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெறும் எனவும் கூறினர்.

News December 13, 2025

பொங்கல் பரிசு ₹3,000.. வெளியான முக்கிய தகவல்

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நிதி ஆதாரங்களை திரட்ட அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாம். குறிப்பாக, அதிக லாபத்தில் இயங்கும் துறைகளிடம் கூடுதல் நிதி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிச., கடைசி வாரத்தில் பொங்கல் பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 13, 2025

₹10,000 தந்தாலும் முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காது: அசாம் CM

image

அரசின் நலத்திட்டங்களை விட, சித்தாந்தங்களே வாக்களிப்பதை உறுதி செய்வதாக அசாம் CM ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். ₹10,000 கொடுத்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், பாஜக ஆளும் அசாம் CM-ன் இந்த பேச்சு விவாதத்தை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!