News March 27, 2024
நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <
Similar News
News December 11, 2025
விரைவில் மோடி – இஸ்ரேல் PM சந்திப்பு

PM மோடியை, இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை இருவரும் வன்மையாக கண்டித்து உரையாடினர். காசா அமைதி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கும், உலகில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என மோடி உறுதியளித்தார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்திப்பார்கள் என இஸ்ரேல் PM அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 11, 2025
இந்தியாவில் ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யும் அமேசான்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதற்காக ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. லாஜிஸ்டிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த ஏற்றுமதி 80 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்யும் 1.5 கோடி பேருக்கு AI-ன் பலன்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.


