News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 18, 2025

ராக்கெட் வேகத்தில் உச்சம்.. விலை மொத்தம் ₹14,000 உயர்வு

image

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹224-க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹2,24,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹14,000 அதிகரித்துள்ளது.

News December 18, 2025

அஸ்வின் Vs CSK ரசிகர்கள்.. வெடித்தது மோதல்

image

SM-ல் கடந்த சில நாள்களாக அஸ்வினுக்கும், CSK ரசிகர்களுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. ஏலத்தில் யாரையெல்லாம் CSK வாங்கும் என்ற தகவலை கசியவிட்டு, வேண்டுமென்றே விலையை ஏற்றிவிட்டதாக ரசிகர்கள் சாடினர். தற்போது யூடியூப்பிலும், CSK-வின் வீரர்கள் தேர்வை அஷ்வின் மறைமுகமாக விமர்சித்தார். CSK மீது எதற்காக வன்மம் பரப்புகிறீர்கள் என்ற கேள்விக்கும், அஸ்வின் Haha Smiley பதிவிட்டதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

News December 18, 2025

தவறாக பயன்படுத்தப்படும் AI.. என்னதான் தீர்வு?

image

AI டெக்னாலஜியை பயன்படுத்தி, தொடர்ந்து சோஷியல் மீடியாவில் நடிகைகள் குறித்து மிகவும் மோசமான வகையில் போட்டோக்கள் பகிரப்படுகின்றன. நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். டெக்னாலஜியின் வளர்ச்சியால், இப்படியான பதிவுகள் வருங்காலத்தில் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் சூழலில், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

error: Content is protected !!