News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 12, 2025

ஹாஸ்பிடல் மீது தாக்குதல்.. 34 பேர் பலி

image

மியான்மரில் நிலவும் உள்நாட்டு போரால், பொதுமக்கள் தொடர்ச்சியாக பலி வாங்கப்படுகின்றனர். இந்நிலையில், Arakan ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாஸ்பிடல் மீது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் நோயாளிகள், டாக்டர்கள் என 34 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

News December 12, 2025

3 நாடுகளுக்கு செல்கிறார் PM மோடி

image

சமீபத்தில் தெ.ஆப்பிரிக்கா சென்று வந்த PM மோடி, டிச.15 – 18 வரை 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜோர்டான் (டிச.15 – 16), எத்தியோப்பியா (டிச.16 – 17) & ஓமன் (டிச.17 – 18) ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ஆற்றல், தொழில்நுட்பம், உள்ளிட்ட விவகாரங்களில் அந்தந்த நாடுகளுடனான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

News December 12, 2025

அதிபர் டிரம்ப், PM மோடி முக்கிய ஆலோசனை

image

இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அதிபர் டிரம்ப், PM மோடி போனில் உரையாடியுள்ளனர். இதுகுறித்து X-ல் பதிவிட்டுள்ள PM மோடி, உலக அமைதி, ஸ்ரதித்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, எரிசக்தி போன்ற விஷயங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!