News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 10, 2026

விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல்.. CBI சோதனை!

image

விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த CBI அதிகாரிகள் கரூரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று பஸ்ஸில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விஜய்யின் பிரசார பஸ் டிரைவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் விஜய், டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக CBI அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த சோதனையானது கவனத்தை பெற்றுள்ளது.

News January 10, 2026

மீண்டும் விஜய் – அஜித் மோதல்?

image

‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு விசாரணை ஜன.21-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜன.23-ல் அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ஒருவேளை ஜனநாயகனுக்கு சர்டிபிகேட் கிளியர் ஆனால், அப்படமும் ஜன.23-ல் வெளியாக வாய்ப்புள்ளது. ஜன நாயகன் பிரச்னை தீர்ந்தால், வாரிசு – துணிவு படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மீண்டும் ஒரு Clash-க்கு ரெடியா?

News January 10, 2026

விஜய்யை அடிபணிய வைக்க முயற்சியா? கருணாஸ்

image

விஜய்யின் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமான விஷயம் என கருணாஸ் தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சிக்காக விஜய்யை அடிபணிய வைக்கவும், நிர்பந்தத்தை ஏற்படுத்தவும் தணிக்கை வாரியத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இப்பிரச்னையில் விஜய்க்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் துணைநிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!