News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 11, 2025

BREAKING: டிச.15 முதல் விருப்ப மனு: EPS

image

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.15 – டிச. 23 வரை விருப்ப மனு பெறலாம் என EPS அறிவித்துள்ளார். முதல் நாளான 15-ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. மற்ற நாள்களில் காலை 10 – மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெறலாம். மேலும், மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

விஜய்யின் ஆசைக்கு அளவில்லை: கோவி.செழியன்

image

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு, ‘கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்’ என்பது போன்று இருந்ததாகவும் அவர் விமர்சித்தார். மேலும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

News December 11, 2025

Ro-Ko கான்ட்ராக்டை மாற்றுகிறதா BCCI?

image

Ro-Ko ஆகியோரின் சம்பள ஒப்பந்தத்தில் விரைவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது A+ பிரிவில் (ஆண்டுக்கு ₹7 கோடி) உள்ளனர். ஆனால், இந்தியாவுக்காக 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடுபவருக்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 22-ம் தேதி BCCI-ன் வருடாந்தர பொதுக்குழு கூட்டத்தில், இவர்களின் கான்ட்ராக்ட் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!