News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 28, 2025

இனி II CLASS ஸ்லீப்பர் கோச்சில் பெட்ஷீட், தலையணை உண்டு!

image

ரயில்களில் வழக்கமாக AC வகுப்புகளில் மட்டுமே பயணிகளுக்கு பெட்ஷீட்டும், தலையணையும் வழங்கப்படும். இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து Non AC ஸ்லீப்பர் கோச்சிலும், ₹50 செலுத்தி பெட்ஷீட், தலையணையை பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தலையணை மட்டும் ₹30-க்கும், பெட்ஷீட்டை ₹20-க்கும் கூட பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News November 28, 2025

14 வயது சிறுமி, 13 வயது சிறுவன் காதல்… அதிர்ச்சி!

image

14 வயது சிறுமியும், 13 வயது சிறுவனும் காதல் மயக்கத்தில் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, விஜயவாடாவில் சிறுமியை கூட்டிக் கொண்டு கையில் அப்பாவின் மொபைல் போன் மற்றும் ₹10 ஆயிரத்துடன் வந்து இறங்கியுள்ளான். ஹோட்டல் ரூம் தேடிய சிறுவனை பார்த்து சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீஸுக்கு தகவல்தர, இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரே கவனிங்க!

News November 28, 2025

டிட்வா புயலின் வேகம் அதிகரிப்பு

image

டிட்வா புயலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்போது 7 கிமீ ஆக அதிகரித்துள்ளது. புயலானது, சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

error: Content is protected !!