News March 27, 2024
நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <
Similar News
News December 16, 2025
வாசலை அலங்கரிக்கும் ஸ்பெஷல் மார்கழி கோலங்கள்!

பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதிகாலையில் கோலமிட்டு இறை வழிபாடு செய்தால் நமது விருப்பங்கள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள கர்ம வினைகள் அகலும் என நம்பப்படுகிறது. அப்படியாக, வீட்டு வாசலில் போடக்கூடிய சில எளிய கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டிலும் முயற்சிக்கவும்..
News December 16, 2025
அடுத்த தலைமுறையை அழிக்கும் திமுக: H.ராஜா

TN-ல் 55 மாதங்களில் 6,700 படுகொலைகள் நடந்துள்ளதாக H.ராஜா சாடியுள்ளார். இவை அனைத்தும் மது, போதை வஸ்துகளால் நிகழ்ந்தவை எனவும், போதைப்பொருள் விற்பனையில் TN முதலிடத்தில் உள்ளதாகவும் சாடினார். திமுக EX நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த தலைமுறையை அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.


