News March 18, 2024

இன்றே கடைசி: 2,157 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இணையதளம்: http://ssc.gov.in

Similar News

News October 30, 2025

வங்கி கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்தர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 30, 2025

Currency, Airport இல்லை.. ஆனால் உலகின் பணக்கார நாடு இது!

image

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே பயன்படுத்துகிறது. 38,000 பேர் மட்டுமே வசித்தாலும், தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ₹1.75 கோடியாம். இது USA, ஜப்பானை விட அதிகம். வரி குறைவு என்பதால், பல முன்னணி நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்குகின்றன. மேலும், உயர் கல்வி & தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், வலுவான வங்கித் துறை ஆகியவற்றால் ஐரோப்பாவின் 2-வது பணக்கார நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது.

News October 30, 2025

கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

image

சரிந்து கிடக்கும் மார்கெட்டை மீண்டும் உயர்த்தும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார். தற்போது இந்திய சினிமாவில் சாமி- கமர்சியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த லைனில்தான் ‘கருப்பு’ தயாராகியுள்ளது. அதை தொடர்ந்து, பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்த தெலுங்கு இயக்குநர் ‘லக்கி பாஸ்கர்’ வெங்கி அட்லூரி, மலையாள இயக்குநர் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் ஆகியோருடனும் கை கோர்க்கிறார். கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

error: Content is protected !!