News May 10, 2024
10ஆம் வகுப்பு தேர்ச்சியில் கடைசி இடம் பெற்ற மாவட்டம்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 18,357 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,104 பேரும், மாணவிகள் 9,253 பேரும் தேர்வெழுதிய நிலையில், 6,885 மாணவர்களும் (75.63%), 8,181 மாணவிகளும் (88.41%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News September 23, 2025
விசித்திரமான இடங்கள்

உலகில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அவை இயற்கை அற்புதங்களாகவும், மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. சில இடங்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. அவற்றில் சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று வேறு ஏதேனும் விசித்திரமான இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
BREAKING: ₹85,000-ஐ தாண்டிய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,500-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹84,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News September 23, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000: இதை செய்தால் கிடைக்கும்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வரும் <<17775670>>அக். 18-ம் தேதி <<>>₹2,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விவசாயிகள் இதை பெறுவதற்கு e-KYC, நிலப்பதிவுகள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை செய்ய வேண்டியது அவசியம். அதேபோல், தங்களது விவசாயி பதிவேட்டையும் புதுப்பிக்க வேண்டும். மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் நேரடி மானிய விருப்பத்தையும், ஆதார் மற்றும் மொபைல் எண்ணை இணைப்பதும் கட்டாயமாகும்.