News April 22, 2025
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்பு

ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தற்போதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
Similar News
News September 11, 2025
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசு சார்பில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். திருப்பூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு EPS மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பரமக்குடியில் நயினார், சீமான் உள்ளிட்டோரும் நேரில் மரியாதை செலுத்தினர்.
News September 11, 2025
கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம்; அசத்தல் திட்டம்

மத்திய அரசின் ஜனனி-ஷிஷு சுரக்ஷா திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அட்மிஷன் ஆவது முதல் டெலிவரி வரை அத்தனை செலவையும் அரசே ஏற்கும். அதாவது, கர்ப்பிணிகளுக்கான மருந்து, உணவு, போக்குவரத்து, பரிசோதனைகள் என அத்தனை செலவும் இலவசமாக கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற, கர்ப்ப காலத்தில் அரசு ஹாஸ்பிடலில் பதிவு செய்து, ஜனனி சுரக்ஷா அட்டையை வாங்கிக்கொள்ளுங்கள். SHARE.
News September 11, 2025
IND Vs PAK போட்டியை ரத்து செய்ய முடியாது: SC

செப்.14-ல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரின் இந்தியா – பாக்., போட்டியை ரத்து செய்ய கோரி SC-ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க SC மறுத்துள்ளது. அத்துடன், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது என்றும் SC தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்போட்டியை கொண்டாடுவது, ராணுவ வீரர்கள், உயிரிழந்தவர்களது குடும்பங்களின் தியாகத்தை அவமதிப்பது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.