News March 13, 2025

EV கார் தயாரிப்பில் இருந்து பின் வாங்கிய லேண்ட் ரோவர்

image

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து EV கார்களை தயாரிக்க இருந்த திட்டத்தை ஜாக்குவார் லேண்ட் ரோவர் கைவிட்டுள்ளது. உள்ளூரில் EV பாகங்களுக்கான சரியான விலை, தரம் தொடர்பான கவலைகள் எழுந்ததால், இத்திட்டம் கடந்த 2 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், EVஐ விட Hybrid கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதும் இம்முடிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

Similar News

News August 5, 2025

கணவரை பிரியும் ஹன்சிகா.. சூசக அறிவிப்பு?

image

நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்கள் விவாகரத்து பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஹன்சிகாவின் இன்ஸ்டாவில் திருமண போட்டோஸ், சோஹைலுடன் எடுத்துக் கொண்ட எந்த ஒரு போட்டோவும் இல்லாததால், இந்த கருத்து எழுந்துள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் விவாகரத்தை இன்ஸ்டாவில் திருமண போட்டோக்களை டெலிட் செய்து தான் அறிவிக்கின்றனர்.

News August 5, 2025

திமுக பேய், அதிமுக பிசாசு.. சீமான் விமர்சனம்

image

திமுக, அதிமுகவை பேய், பிசாசு என்று சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது என்றும் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதால், வட இந்தியர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது எனவும் கூறிய அவர், மாடுகளுக்கு மட்டுமல்ல மரங்களுக்காகவும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

அருங்காட்சியகமாக மாறும் ஷேக் ஹசீனாவின் இல்லம்

image

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஜூலை புரட்சி நினைவு அருங்காட்சியகம்’ என அதற்கு பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லமாக மாறுவதற்கு முன் இது ராஜ்பரி எஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. வங்கதேசத்தில் பிரதமருக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்ததையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

error: Content is protected !!