News October 23, 2024

தீபங்களும் ஏற்ற வேண்டிய இடங்களும்

image

ஒருவர் தனது வீட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப தீபமேற்றி வழிபடுவதால் ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரிக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அதன் விவரம் இதோ: *கோலமிட்ட வாசல்-5 *திண்ணை – 4 *மாடக்குழி – 2 *நிலைப்படி – 2 *வாசல்படி – 2 *முற்றம் – 4 *பூஜையறை – 2 *சமையலறை – 1 *தோட்டம் – 16 விளக்கு ஏற்றி வைத்து, ‘தீப லட்சுமியே நமோ நம’ என்ற மந்திரத்தை 24 முறை சொல்லி வணங்கினால் சர்வ மங்கலமும் உண்டாகும்.

Similar News

News December 1, 2025

பஸ் விபத்தை தடுக்க ஓட்டுநர், நடத்துநருக்கு டிரெய்னிங்!

image

<<18436984>>காரைக்குடி, மாமல்லபுரத்தில்<<>> அரசு பஸ் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய நிலையில், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விபத்தை தடுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். TNSTC-ல் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து கூடுதலாக வேலை வாங்குவதே விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனை மறுத்துள்ள அமைச்சர், விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

News December 1, 2025

இரும்பு கம்பியை சொருகியது போல் வலி: திருமா உருக்கம்

image

கட்சியின் வளர்ச்சிக்காக, தாங்க முடியாத உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக முட்டி வலி, கால் வலி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கழுத்தில் இருந்து இடுப்பு வரை இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் உள்ளதாக உருக்கத்துடன் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

News December 1, 2025

இந்து மதத்தில் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை!

image

‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ என்றவுடன், இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளது என்றே பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் கோடி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கோடி(Crore) & வகை என அர்த்தங்கள் வரும். இந்த ‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ வாக்கியத்தில் வகை அர்த்தம்தான் சொல்லப்படுகிறது. 33 தேவர்கள் அதாவது, 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் & பிரஜாபதி ஆகியோர் அடங்குவர்.

error: Content is protected !!