News March 15, 2025
பெண்களே.. நாட்டுக்கோழி பண்ணை அமைக்கணுமா?

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏழைப்பெண்களுக்கு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்துக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிறு பால் பண்ணைகள் அமைக்க 4% மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News March 15, 2025
ENG எதிரான டெஸ்ட்: கேப்டனாக ரோஹித் தொடர்வாரா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக AUS எதிரான BGT தொடரின் கடைசி டெஸ்டில் ரோகித் பங்கேற்காமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது. இதற்கிடையே, CT கோப்பையை IND கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க BCCI நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
News March 15, 2025
பச்சைத்துண்டு போட்டால் என்ன?

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனதை முன்னிட்டு திமுக MLAக்கள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, துரை முருகன், பெரிய கருப்பன், நேரு ஆகிய முன்னணி அமைச்சர்கள் மட்டும் பச்சைத்துண்டு அணியவில்லை. இதனை சோசியல் மீடியாவில் பகிரும் எதிர்க்கட்சியினர் தாங்களும் பச்சைத்துண்டு போட்டால் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.
News March 15, 2025
பவன் அப்போது பிறந்திருக்கவே மாட்டார்: TKS இளங்கோவன்

தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள் என பவன் கல்யாண் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார். ‘இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதற்காக 1968-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பவன் பிறந்திருக்கவே மாட்டார்’ என அவர் தெரிவித்துள்ளார்.