News October 27, 2025
பெண்களே உஷார்! இந்த நோய் உயிரை பறிக்கும்

40 வயதான பெண்களுக்கு brain aneurysm நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறதாம். மூளையிலுள்ள ரத்த நாளங்கள் வீங்கி, வெடிப்பதைதான் brain aneurysm என்கின்றனர். அப்படி நடந்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிர் பறிபோகலாம். இதற்கு Stress-ம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அடிக்கடி கழுத்து வலி, கடுமையான தலைவலி, திடீரென பார்வை மங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் டாக்டரை அணுகுங்கள். SHARE.
Similar News
News October 27, 2025
CM பதவியை தக்கவைக்க அமைச்சரவையில் மாற்றம்

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, நவ.20 உடன் சித்தராமையா CM ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பதவியை விட விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நவ.15-ல் டெல்லி மேலிடத்தை சந்திக்கிறார்.
News October 27, 2025
PAK-AFG மீண்டும் மோதல்: 5 பாக். வீரர்கள் பலி

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போரை தொடங்குவோம் என பாக்., அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆப்கன் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இந்த மோதலில், 5 பாக்., வீரர்கள், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. தங்களது எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக பாக்., ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
News October 27, 2025
வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மொன்தா புயல் சென்னைக்கு கிழக்கு பகுதியில் 560 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


