News June 26, 2024
காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்

பிக்பாஸ் தமிழில் ரம்யா, அரோரா, ஆதிரை, வியானாவை தவிர 11 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், unofficial Voting-ல் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் சுபிக்ஷா எலிமினேட் ஆவது உறுதி என கூறப்படுகிறது. ஒருவேளை டபுள் எவிக்ஷனாக இருந்தால் , கனி அல்லது அமித் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது. வேறு யார் வெளியேற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
News December 6, 2025
FIFA 2026 அட்டவணை வெளியானது!

2026 கால்பந்து WC-ன் அட்டவணை வெளியாகியுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 11, 2026-ல் தொடங்கும் போட்டிகள் ஜூலை 19-ல் முடிவடைகின்றன. 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், அல்ஜீரியாவும் மோதுகின்றன. அணிகள் எந்த குரூப்பில் இடம்பெற்றிருக்கிறது என்பதை அறிய போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.
News December 6, 2025
நம்பிக்கைகளை தீர்ப்பில் காட்டக்கூடாது: பெ.சண்முகம்

அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டுதான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும் என சிபிஎம் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றி பேசிய அவர், நீதிபதிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது என விமர்சித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


