News June 26, 2024
காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
ஒரிஜினல் மிளகு Vs பப்பாளி விதை: எப்படி கண்டுபிடிப்பது?

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பொருள் மிளகு. இதில், பப்பாளி விதைகளை சேர்த்து கலப்படம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரிஜினல் மிளகை கண்டுபிடிப்பது எப்படி? *ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகை போட்டால், கலப்படமில்லாத மிளகு தண்ணீரில் மூழ்கிவிடும், பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும் *பப்பாளி விதையில் ஒருவித கசப்பு வாசனை வரும், ஆனால் மிளகுக்கு தனித்துவமான கார வாசனை உண்டு.
News December 13, 2025
GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை: CM

இந்தியாவின் மாநில பொருளாதார வளர்ச்சியில் (GSDP) 16% உடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், பெருமாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் வானுயர் சாதனையை படைத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லாமலேயே இந்த சாதனையை செய்துள்ளதாக கூறிய அவர், 2021-2025 நிதியாண்டுகளில் மட்டும் தமிழகத்தின் பொருளாதாரம் ₹10.5 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
News December 13, 2025
தமிழ் நடிகை மரணம்.. கடைசி PHOTO

நடிகை ராஜேஸ்வரி மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மீனா செல்லமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி தன்னுடன் சிரித்த முகத்துடன் எடுத்த கடைசி போட்டோவை பதிவிட்டு, ‘நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே!, ஏன் இப்படி தற்*லை பண்ணுன ராஜி!, ஆசை ஆசையா வளர்த்த பொண்ண பத்திகூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே, மனசு வலிக்குது ராஜி என உருக்கமாக இரங்கல் கூறியுள்ளார்.


