News June 26, 2024
காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.
News December 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.
News December 9, 2025
பிரதீப்பின் ‘LIK’ ரிலீஸில் மீண்டும் சிக்கலா?

பிரதீப்பின் படங்கள் தொடர்ந்து ₹100 கோடி வசூலை கொடுத்ததால், அடுத்து ரிலீஸாக உள்ள LIK படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. சென்ற தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டிய இப்படம், டியூட் ரிலீஸால் தள்ளிப்போனது. இதனையடுத்து டிச.18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. அதாவது ஒரேடியாக அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடுவதாக பேசப்படுகிறது.


