News June 26, 2024

காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

image

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

நாளை 7 மாவட்டங்களில் விடுமுறையா? வந்தது Alert

image

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 16, 2025

மூன்று திசைகளில் பார்வையை பதித்த விஜய்

image

SIR-க்கு எதிராக தவெக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2-ம் கட்ட தலைவர்களை களமிறக்கியுள்ளார் விஜய். தலைநகர் சென்னையில் புஸ்ஸி ஆனந்த், கொங்கு மண்டலமான கோவையில் அருண்ராஜ், தென்மண்டலமான மதுரையில் நிர்மல்குமார் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2-ம் கட்ட தலைவர்கள் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும், கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

News November 16, 2025

பிரபல நடிகை மரணம்.. நடிகர் கண்ணீருடன் இரங்கல்

image

மறைந்த பழம்பெரும் நடிகை <<18284857>>காமினி<<>> குறித்து நடிகர் சாகித் கபூர் எமோஷனலாக பேசியுள்ளார். கபீர் சிங் படத்தில் காமினியுடன் நடித்த அனுபவங்களை நினைவுக்கூர்ந்த சாகித், அவருடன் பணிபுரிந்தது ஒரு பாக்கியம் என கூறியிருக்கிறார். மேலும் காமினி ஒரு அற்புதமான கலைஞராக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அவர் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர் என்றும் சாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!