News June 26, 2024

காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

image

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

image

சில்லென்ற காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று. நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? COMMENT IT.

News December 2, 2025

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சமீபமாக பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி ஏர்போர்ட்டிற்கு வந்த இமெயிலில், விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக விமானம் மும்பை ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.

News December 2, 2025

செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்..

image

பல முன்னாள் அமைச்சர்களும், அனுபவமுள்ள தலைவர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தையை நடத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. டிச.15-ல் ஓபிஎஸ் முக்கிய முடிவை எடுக்கவிருப்பதால், அதுவரை பொறுத்திருங்கள் என்று செங்கோட்டையனிடம் வெல்லமண்டி பதிலளித்துள்ளாராம்.

error: Content is protected !!