News October 28, 2025
கர்னூல் விபத்து.. ஷாக்கிங் தகவல்!

கர்னூல் பஸ் விபத்து குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டிவந்த சிவசங்கர் 2:45 மணியளவில் டிவைடரில் மோதி மரணமடைகிறார். பைக்கின் மீது பஸ் மோதியது 2:55 மணிக்கு. இடைப்பட்ட 10 நிமிடங்களில், சாலையில் கிடந்த பைக்கை 19 பேர் கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர், பைக்கை ஓரம் கட்டியிருந்தால், இந்த விபத்தே தவிர்க்கப்பட்டிருக்குமே என்ற கேள்வி எழாமல் இல்லை.
Similar News
News October 28, 2025
வழுக்கை தலையில் 20 நாளில் முடி வளரும்.. வந்தாச்சு மருந்து!

காதலி இல்லாத வலியை விட, முடி கொட்டும் வலிதான் இளைஞர்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், இப்பிரச்னைக்கு தைவான் ஆய்வாளர்கள் தீர்வு கண்டறிந்துள்ளனர். National Taiwan University-யை சேர்ந்த ஆய்வாளர்கள், 20 நாள்களில் வழுக்கை தலையில் முடி வளர்க்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் மீது இன்னும் சோதிக்கப்படவில்லை என்றாலும், ‘பண்டிகைய கொண்டாடுங்கலே’ என்ற மோடில் நெட்டிசன்கள் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர்.
News October 28, 2025
8-வது ஊதியக்குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

8-வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழு தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினர் செயலாளராக பங்கஜ் ஜெயின், பகுதி நேர உறுப்பினராக புலக் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைப்படி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையவுள்ளனர். 2026-ம் ஆண்டு ஜன.1 முதல் இக்குழுவின் பரிந்துரைகள் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.
News October 28, 2025
இமயமலையில் வெள்ள அபாயம்

கடந்த 14 ஆண்டுகளில், ஜம்மு – காஷ்மீரில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரிகள் 50% அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வழித்துறை ஆணையம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


