News April 9, 2025
குமரி அனந்தனின் நிறைவேறாத ஆசைகள்

நதிநீர் இணைப்பு, மது ஒழிப்பு ஆகியவை குமரி அனந்தனின் நீண்டநாள் கோரிக்கைகள். இதற்காக குமரி-சென்னைக்கு பல முறை அவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் பேசும்போதும் தனது விருப்பத்தை அவர் முன்வைக்க தவறியதே இல்லை. ஆனால் அவரது ஆசைகள் கடைசி வரை நிறைவேறவே இல்லை. குமரி அனந்தன் மறைந்தாலும், அவர் மேற்கொண்ட பாத யாத்திரைகள் என்றும் தமிழக வரலாற்றில் அவருக்கு புகழை பெற்றுத் தரும்.
Similar News
News December 5, 2025
விழுப்புரம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை!

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் & விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று (டிச.5) மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர், காவலர்கள் & மோப்பநாய் ராணி உதவியுடன். பின் பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இது நாளை டிச.6(பாபர் மசூதி விவகாரம்) தினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
News December 5, 2025
குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறாங்களா?

குழந்தைகள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் உடனே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்காதீர்கள். அவர்கள் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைதான் அவர்களும் சாப்பிடணும் என சொல்லுங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால், நாளடைவில் அவர்கள் அனைத்திற்கும் அடம்பிடிப்பார்கள் என குழந்தைகள் நல டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே குழந்தைகளை அப்படி வளர்க்காதீங்க. SHARE.
News December 5, 2025
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மத்திய அரசு முடிவு

மக்களின் துல்லியமான லொகேஷனை (A-GPS) எப்போதும் On செய்து வைத்திருப்பதை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, டவர் சிக்னல் படி தோராயமான லொகேஷனையே பெற முடிவதால், புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது மக்களின் தனியுரிமையை பாதிக்கும் என ஆப்பிள், கூகுள், சாம்சங் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.


