News March 18, 2024
குமரி: குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு

குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News December 2, 2025
குமரி: இந்த APP உங்க போனில் இருக்கா.? அரசு உத்தரவு!

மத்திய அரசு அண்மையில் ஒரு மிக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதில், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் ‘<
News December 2, 2025
குமரி: வட்டியுடன் ரூ.40 லட்சத்தை வழங்க கோர்ட் உத்தரவு

என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் பர்ணபாஸ். இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் இறந்துவிட்டார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு வைத்திருந்தார். அவரது மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்தில் அவரது மனைவி சமர்ப்பித்த நிலையில் அதனை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனம் 40 லட்சத்தை 6.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.
News December 2, 2025
குமரி: பட்டாசு கடை வைக்க போறீங்களா? கலெக்டர் அழைப்பு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை ஒட்டி குமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். வருகிற 10ம் தேதிக்கு முன்னதாக இ-சேவை மையங்களில் அதற்குரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இடத்தின் வரைபடம் பட்டா போன்றவைகள் அதில் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


