News March 18, 2024

குமரி: குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு

image

குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News December 8, 2025

குமரியில் 820 பேர் கைது!

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

News December 8, 2025

குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை பண்ணுங்க!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News December 8, 2025

குமரி: லாரி மோதி இளைஞர் பலி!

image

மணவாளக்குறிச்சி நடுவூர்கரை பகுதி லாரி டிரைவர் சதீஷ்குமார்(40). இவர் நேற்று (டிச.7) மாலை லாரியில் பொருட்களுடன் குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும்போது தெக்குறிச்சி சேதுபதி (24) பைக்கில் ஆலன்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென பைக் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேதுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

error: Content is protected !!