News March 18, 2024

குமரி: குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு

image

குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News September 17, 2025

குமரி: தரச்சான்று கட்டணம் குறைவு

image

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தினமும்    பயன்படுத்தும் அரிசி, தேன், மசாலா பொருட்கள்,எண்ணெய் உட்பட 248  வகை அத்தியாவசிய பொருட்களில் கலப்படத்தை தவிர்க்கும் பொருட்டு அக்மார்க் தரச்சான்று பெற்று உற்பத்தியாளர்கள் விற்பனை செய்கின்றனர்.  தற்போது அக்மார்க் தரச்சான்று பெற பதிவுக்கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500 ஆக குறைக்கபட்டுள்ளது. அக்மார்க் தரச்சான்று கட்டாயம் ஆகும். 

News September 17, 2025

குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

குமரி: செப்.25, அக்.10 மாணவர்களே MISS பண்ணாதீங்க

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்:
செப். 25-ந் தேதி மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும்,
அக்.10ம் தேதி சுங் கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கட னுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் https://pmvidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!